சென்னை,அக்.17- ஜெயலலிதா மரணமடைந்த நேரத்தில் 40 அதிமுக எம்.எல்.ஏ.க் கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும் ஆனால் அதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க வில்லை என்று மறுத்துவிட்டதாக வும் சென்னையில் நடைபெற்ற விழாவில், சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இது அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சபா நாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞரணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவ தூறு வழக்கு தாக்கல் செய்திருந் தார். இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சபாநாயகர் அப் பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமையன்று நீதிபதி ஜெயசந்திரன் முன்புநடைபெற்றது. அப்போது நீதிபதி, அவதூறு வழக்கு தாக்கல் செய்ய என்ன அடிப் படை உரிமை உள்ளது. 40 எம்.எல்.ஏ.க்கள் எவரும் வழக்கு தாக்கல் செய்யவில்லை. அப்பாவும் தனது பேச்சில் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாக கற்பனையாக கூறமுடி யாது. அதிமுக ஆட்சி 5 ஆண்டு கால பதவியை பூர்த்தி செய்தது. எவரும் கட்சி தாவவில்லை. சபாநா யர் பேச்சால் எப்படி அதிமுகவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது என்று அதிமுக தரப்புக்கு நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார். கீழ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து ஆஜராவதில் விலக்கு பெற்றுக் கொள்ளும்படி அப்பாவு தரப்புக்கு வலியுறுத்தினார். இது குறித்து அப்பாவுவின் வழக்குக்கு பதிலளிக்குமாறு பாபு முருகவே லுக்கு நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.