பிரதமர் மோடியின் “மன் கி பாத்” நிகழ்ச்சியின் 100 எபிசோட்களுக்கு ரூ.830 கோடியை அரசு செலவிட்டுள்ளது என டுவீட் செய்த குஜராத் மாநில ஆம் ஆத்மி தலை வர் இசுதன் காத்வி மீது அம்மாநில போலீசார் வழ க்குப்பதிவு செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு பகுதியின் தனியார் பள்ளியில் கழி வுநீர் தொட்டியை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட கோவிந்தன், சுப்பராயலு என்ற 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரி ழப்பு. 2 பேரின் உடல்க ளை கழிவுநீர் தொட்டியி லிருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்ட நிலையில், பள்ளி தாளாளர் சிமியோன் விக்டரை கைதுசெய்துள்ளனர்.
மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை நீக்கியதன் மூலம் கடந்த நிதியாண்டில் இந்திய ரயில்வே ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய் ஈட்டி யுள்ளது என தகவல் உரிமை சட்ட (ஆர்டிஐ) கேள்விக்கு ரயில்வே துறை பதிலளித்துள்ளது.
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வரும் 5-ஆம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவித்துள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம், அன்றைய நாள் நோயாளிகள் மருத் துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
ஊட்டி பகுதியில் விதி களை மீறி செயல்பட்ட 4 சொகுசு விடுதிகளுக்கு சீல் வைத்தது நீலகிரி மாவட்ட நிர்வாகம்.