states

img

ஆளுநர் தனது கடமையை செய்ய வேண்டும் தாண்டிச் செல்ல நினைக்க வேண்டாம்: முதலமைச்சர் பேச்சு

ஆரிப் முகமது கான் ஆளுநரா? மன்னரா? 
கே.முரளிதரன் கேள்வி

மன்னார்க்காடு, அக்.25- கேரள ஆளுநர் தனது பணிகளைச் செய்  தால் போதும், அதல்லாமல் தனக்கு இல்  லாத அதிகாரத்தை எடுத்து பயன்படுத்தி விடலாம் என்று நினைக்க வேண்டாம் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். பாலக்காடு மாவட்ட சிஐடியு மாநாட் டின் நிறைவுப் பொதுக்கூட்டத்தை முதல் வர் தொடங்கி வைத்து பேசினார். அப் போது அவர், ஊடகங்களை சிண்டிகேட்  என்று அவர் (ஆளுநர்) அழைத்தார் அல் லவா. செய்தியாளர் சந்திப்பிலிருந்து வெளியேறுங்கள் என்று சொன்னாரே, என்னவெல்லாமோ சொல்கிறார். யார் சொல்படி இதையெல்லாம் செய்கிறார்? அந்த பருப்பு எதுவும் இங்கு வேகாது என்  றார் முதல்வர்.

எதையும் கண்ணியமாகச் சொல்லக் கூடியவர்கள் நாங்கள். மெதுவாக நோண்  டிப் பார்க்கலாம் என்று கருத வேண்டாம்.  அதிகாரத்தை மீறி ஒரு அங்குலம் கூட போக லாம் என்று நினைக்காதீர்கள். ஆளுநருக்கு தனிப்பட்ட முறையில் எதையும் செய்ய அதி காரம் இல்லை. அது இங்கே நடக்காது. ஆளுநருக்கு என்ன நடந்தது என்று தெரி யவில்லை என்று முதல்வர் கூறினார்.

ஒரே நாளில் துணை வேந்தர்களை நீக்  கும் ஆரிப் முகமது கான் ஆளுநரா அல்லது மன்னரா என்று காங்கிரஸ் தலைவர் கே. முரளீதரன் கேள்வி எழுப்பினார். இப்போது பதவி நீக்கம் செய்ய வேண்  டும் என்று சொல்லும் 7 வி.சி.க்களையும் இதே ஆரிப் முகமது கான்தான் நியமித் தார். அப்போது ஆளுநருக்கு சட்டம் தெரி யாதா? பதவி விலகக் கோரும் முன் ஆளுநர்  விளக்கம் கேட்காதது ஏன்? தெருவில் தக ராறு நடந்தால், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று இதே ஆளுநர் கூறுவார். ஆளுநர் மூலம் கல்வித்துறையை காவிமய மாக்க பாஜக முயற்சிக்கிறது என்று கே. முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறி னார்.

ஊடகங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சரியா? பத்திரிகையாளர் சந்திப்  பில் கைரளி மற்றும் ஜெய்ஹிந்த் செய்தி  ஊடகத்தினர் ஏன் விலக்கி வைக்கப்பட்ட னர் என்றும் கேள்வி எழுப்பினார். ஆளு நருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி தலை வர் கே.சுதாகரன் பேசியது குறித்து செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பியபோது அது அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றும் முரளிதரன் கூறினார். ஆளுநருக்கு ஆத ரவளிக்கும் எந்த ஏற்பாடும் காங்கிரஸிடம் இல்லை. இது கட்சியின் தேசிய கொள்கை  என்பதை கே.சி.வேணுகோபால் தெளிவு படுத்தி உள்ளார். கேரள தலைவர்கள் வேறு விதமாக கூறினால், அவர்களிடம்தான் கேட்க  வேண்டும் என்றார் முரளிதரன்.