சென்னை, ஜூன் 30 - விலைவாசியும், வேலையின்மையும் அதிகரித்துக் கொண்டி ருக்கும் சூழலில், இந்த நாட்டிற்கு பொது சிவில் சட்டம்தான் முக்கியமா? என்று பச்சைத் தமிழகம் கட்சியின் நிறுவனர் சுப. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றில் மேலும் அவர் கூறி யிருப்பதாவது: “வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பண மதிப்பு நீக்கம், பி.எம். கேர்ஸ் நிதி, ரபேல் ஊழல், மணிப்பூர் இனக்கலவரம், நிர்வாகச் சீர்கேடு என எதைப்பற்றியும் மறந்தும் வாய் திறக்காத மோடி பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பாஜக ஆளும் சில மாநிலங்களிலும், நீதிமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் கவனமாக காய் நகர்த்தப்பட்டு, மோடியின் திருவாய் எழுந்தரு ளல் வரை அனைத்தும் திட்டமிடப்பட்ட ஒரு பெரும் கபட நாடகம். அகில பாரத இந்து மகாசபா மற்றும் பாரதீய ஜன சங்க் காலத்தி லும், இந்தியா ‘விடுதலை’ அடைந்த தருணத்திலிருந்தும் பொது சிவில் சட்டம் பற்றி பேசிக் கொண்டிருக்கும் வலதுசாரிகள், தக்க நேரத்தில் அந்தப் பிரச்சனையைக் கையிலெடுக்கிறார்கள். அடுத்துவரும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் அவர்களால் முறைப்படி தொடங்கப்பட்டுவிட்டது மக்களே! மத உணர்வுகளைத் தூண்டிவிட, வெறுப்பைப் பரப்ப, கோபத் தைக் கிளற, குழப்பம் விளைவிக்க, மக்களைப் பிரித்தாள, கல வரங்களை எழச்செய்ய, அந்தச் சந்தடியில் அப்பாவி சூத்திரர்க ளின் வாக்குகளை எளிதாகப் பெற திட்டம் தீட்டப்பட்டு விட்டது. அதனால்தான் குடும்பங்களைப் பிரிக்கிறார்கள். குடியிருப்புக் களைப் பிளக்கிறார்கள். குடிமைச் சமூகத்தைக் குழப்புகிறார்கள். பொது சிவில் சட்டம் பற்றிப் பேசுகிறவர்களிடம் விலைவாசி பற்றிக் கேளுங்கள், என் குழந்தைகளுக்கு வேலை எங்கே என்று கேளுங்கள். ‘நாடு நாலாவிதத்திலும் நாசமாகிக் கொண்டிருக் கும்போது, பொது சிவில் சட்டம்தான் முக்கியப் பிரச்சனையா?’ என்று கேள்வி எழுப்புங்கள்.
இவ்வாறு சுப. உதயகுமார் குறிப்பிட்டுள்ளார்.