கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் “கோ பர்ஸ்ட்” (GO FIRST) விமான நிறுவனம் மே 3 மற்றும் 4-ஆம் தேதி களில் விமான சேவையை நிறுத்துவதாக அறிவித் துள்ளது. “கோ பர்ஸ்ட்” விமான நிறுவனம் மும் பையை தளமாக கொண்ட இந்திய நிறு வனம் ஆகும்.
பள்ளிக்கல்வித்துறை வர லாற்றில் முதல் முறை யாக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர 60,000-க்கும் மேற்பட்டோர் விண் ணப்பங்கள் பெறப் பட்டுள்ளன. மாணவர் சேர்க்கை முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் வழக்கமான எண்ணிக் கையை விட இந்தாண்டு அதிகரிக்கும் என எதிர் பார்ப்பு உருவாகியுள்ளது.
கர்நாடக தலைநகர் பெங்களூரில் மே 6 வரை மழை பெய்ய வாய்ப்புள் ளது என இந்திய வானி லை ஆய்வு மையம் அறி வித்துள்ள நிலையில், பிதார், கல்புர்கி, ராய்ச்சூர் யாத்கிர், ராம நகரம், மைசூரு, சிக்கபல்லப்பூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் வாப்பிங்கிற்கு (சிகரெட் உறிஞ்சி) தடை விதிக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும் மின் சிகரெட் சட்டங்களின் பிற அம்சங்களைக் கடு மையாக்கும் திட்டத்தை கொண்டு வரவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
தஞ்சை போலீசாரால் கொலை முயற்சி உள்ளி ட்ட வழக்குகளில் தேடப் பட்டு வந்த குற்றவாளி திராவிடமணி (43) பஹ்ரைனிலிருந்து 19 ஆண்டுகளுக்குப் பின் சென்னை திரும்பிய நிலையில், விமான நிலையத்திலேயே அடை யாளம் கண்டு கைது செய்தது தனிப்படை போலீஸ்.
தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு தேர்வில் ஒன்றுக் கும் மேற்பட்ட பாடங் களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 3 வாரங் களில் துணைத் தேர்வு நடத்த கேந்திரிய வித்யா லயா இயக்குனரகத்திற்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள் ளது. ஒன்றுக்கும் மேற் பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாண வர்களை கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேர்வு எழுத அனுமதிப்ப தில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டி ருந்தது.
தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் பதவி யில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்ய சரத் பவார் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுத்துக் கொள் வார் என்று என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல ஆன்லைன் தொகுப்பு நிறுவனமான எம்எக்ஸ் பிளேயரின் (MX PLAYER) ஒடிடி தளத்தை அமேசான் நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேசான் நிறுவனம் ஏற் கெனவே ஒடிடி தளத்தை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகச் செய்திகள்
இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரிப்பதால் பெரும் கவலை கொள்வதாக அந்நாட்டின் ராணுவ தளபதி ஹெர்சி ஹபேவி தெரிவித்துள்ளார். இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அவர், “கடந்த ஆண்டில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. நாட்டின் ராணுவத்திற்கு இது பெரும் ஆபத்தானதாகவும், பெரும் சவாலாகவும் இருக்கும். இத்தகைய நிகழ்வுகள் தொடராமல் இருக்க அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் பெரிய பொருளாதாரமான ஜெர்மனி பெரிய முன்னேற்றம் எதையும் அடையவில்லை என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் வேலையின்மை விகிதத்தோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஏப்ரலில் குறைந்துள்ளது. ஆனால் இந்தக் குறைவு மிகச்சிறிய அளவில்தான் உள்ளது. தற்போது 25 லட்சத்து 86 ஆயிரம் பேர் ஜெர்மனியில் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் பதின்பருவத்தினர் மத்தியில் தற்கொலை அதிகரித்துள்ளது. இது குறித்து புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஒன்று ஆய்வு மேற்கொண்டது. சமூக வலைத்தளங்களை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவது, பள்ளிகளில் தரப்படும் நெருக்கடி மற்றும் துப்பாக்கிகள் ஆகியவை தற்கொலைகளுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 13 மற்றும் 14 வயதைச் சேர்ந்தவர்கள் அதிகமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.