states

img

பணி ஓய்வு பலனில் தீக்கதிருக்கு நிதி

பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க தலைவர்களில் ஒருவரும் காப்பீட்டு ஊழியர் மாத இதழின் மூத்த ஆசிரியர்களில் ஒருவருமான வி.ரமேஷ், ஏப்ரல் 30 அன்று பணி ஓய்வுபெற்றார். இதையொட்டி மதுரை தீக்கதிர் அலுவலகத்திற்கு வந்த வி.ரமேஷ்- தம்பதியர், தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கத்திடம் ரூ.25 ஆயிரம் வளர்ச்சி நிதி அளித்தனர். வி.ரமேஷ், ‘வெ.ராகுல்ஜி’ என்ற பெயரில் தீக்கதிரில் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.