states

இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கைது

இராமேஸ்வரம், நவ.6- இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற  15 மீனவர்களை இலங்கை  கடற்படையினர் ஞாயிற்றுக் கிழமையன்று கைது செய்த னர்.  இராமநாதபுரம் மாவட் டம், இராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமையன்று  539 விசைப்படகுகள் மீன் வளத்துறை அனுமதி பெற்று 3,500க்கும் மேற்பட்ட மீனவர் கள் கடலுக்குச் மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்  தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கெண்டிருக்கும் போது அங்கு வந்த  இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்  பிடிக்க விடாமல் விரட்டி யடித்தனர்.  இதில், கிறிஸ்டோபர் மற்றும் அந்தோணி ராயப் பன் என்பவரது இரண்டு விசைப்படகுகளில் இருந்த  லியோ,ஜான்சன், எஸ்ரா,  முருகன், நம்புமிலன், காளி முத்து, வினோத், நம்புக் குமார் மற்றும் அந்தோணி ராயப்பன், அருணாச்சலம், பாண்டி, செந்தூர்பாண்டி, ரபிஸ்டன், மருது ஆகிய 15  மீனவர்களை கைது செய்து,  தலைமன்னார் கடற்படை முகா  மிற்கு அழைத்துச் சென்ற னர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்பகுதியில் மீன்பிடித்ததாக கூறி  இரண்டு படகுகளை பறிமுதல் செய்த னர். 15 மீனவர்களை தலை மன்னார் நீரியல் துறை அதி காரிகளிடம் ஒப்படைத்தனர்.  மீனவர்கள் அனைவர் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்த தாக வழக்குப் பதிவு செய்து  நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ள தாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலைநிறுத்தம்  இதனைத் தொடர்ந்து, இராமேஸ்வரம்  மீன்பிடி துறைமுகத்தில் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம்  சார்பில் அவரச கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட தலைவர் ஜேசு ராஜா தலைமை வகித்தார். இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்வ தற்கு மீனவ சங்கம் கடும்  கண்டனம் தெரிவித்தது. பட குகள் மற்றும் மீனவர்களை உடனே விடுவிக்க ஒன்றிய,  மாநில  அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தி திங்கள்கிழமை யன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மேற்கொள்வது என்றும் செவ்வாய்க்கிழமை தங்கச்சி மடம் பேருந்து நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்து வது என்றும் அதன் பின்  அடுத்தக் கட்ட போராட்டம் மேற்கொள்வது என்று தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.