கடந்த செப்டம்பர் மாதம் வெங்காயத்தின் விலை உயர ஆரம்பித்ததால், உள்நாட்டில் வெங்காயத்தின் விலை யைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான ஏற்று மதி வரியை ஒன்றிய அரசு கணிசமாக அதி கரித்தது. இதற்கு மகாராஷ்டிராவில் வெங்காய விவசாயிகளும், வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வெங்காயம் அதிக அளவில் விளையக்கூடிய நாசிக் மாவட்ட காய்கறி சந்தைகளில் வெங்காய ஏலத்தை நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். 13 நாள்களாக நடந்து வந்த போராட்டத்தை அக்.3 அன்று விவசாயிகள் விலக்கிக் கொண்டனர். வெங்காயத்தை தொடர்ந்து தற்போது தக்காளி விலையும் கடுமையாக சரிந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வ தற்காக நாசிக் வந்திருந்தார். ஒஜ்ஹர் விமான நிலையத்தில் இருந்து தீண்டோரி நோக்கி அஜித் பவார் மற்றும் அவருடன் அமைச்சர்கள் சகன் புஜ்பால், சுனில் தட்கரே ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்பொ ழுது அவரது வாகனத்தை மறித்த விவசாயிகள் ஏற்றுமதி வரியை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அஜித் பவார் மற்றும் அமைச்சர்கள் சென்ற வாகனங்கள் மீது வெங்காயம் மற்றும் தக்காளியை வீசி தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.