தருமபுரி, ஆக.20- கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் நீர்வரத்து அதி கரித்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை (ஆக.20) காலை கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 12,776 கனஅடியும், கபினியில் இருந்து 5 ஆயிரம் கன அடி என மொத்தம் 17,776 கனஅடி தண்ணீர் தமிழ்நாடு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கி றது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு காலை முதல் சுற்றுலா பயணி கள் வருவது அதிகரித்தது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் தமிழ் நாடு-கர்நாடக மாநில எல்லையான பிலி குண்டுலுவுக்கு ஒன்றிய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணி கள் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க 5-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.