states

திருவாரூர் பல்கலை.யில் சேர்க்கை குறைவு ஏன்? துணைவேந்தர் விளக்கம்

திருவாரூர், மே 21 - திருவாரூரில் திருவிக அரசு கலைக் கல்லூரியின் 36-வது பட்டமளிப்பு விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் பங்கேற்று 1,145 மாணவர்களுக்கு, பட்டங்களை வழங்கிப் பேசினார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- நாடு முழுவதுமுள்ள 48 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசியின்  அறிவுறுத்தல்படி ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் நாடு முழுவதுமிருந்தும் மாணவர்கள் வந்து படிக்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மாதிரியான பாடத்  திட்டங்கள் உள்ளதால், அவற்றை ஒருங்கிணைக்கவே நுழைவுத்தேர்வு கள் நடத்தப்படுகின்றன. மேலும், 48 பல்கலைக்கழகங்க ளுக்கும் ஒரேமாதிரியான நுழைவுத்தேர்வு மற்றும் பாடத்திட்டம் உள்ளதால், மாணவர்கள் எந்தப் பல்கலைக்கழகத்துக்கும் சென்று படிக்கலாம். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 30 விழுக்காடு தமிழ் மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். குறைந்த அளவு தமிழக மாணவர்களே நுழைவுத்தேர்வு எழுதுவதால்தான், தமிழக  மாணவர்களின் சேர்க்கையும் குறைவாக உள்ளது. மத்திய பல்கலைக் கழகத்தில் நுழைவுத் தேர்வை தமிழில் எழுதலாம் என்கின்ற நடை முறையைகொண்டு வந்துள்ளேன். தேசியகல்விக் கொள்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்துக்கு தமிழக ஆளுநர் மே 27 ஆம் தேதி வருகிறார்.  இவ்வாறு தெரிவித்தார்.