கே.பாலகிருஷ்ணன் பேட்டி
குடியாத்தம், பிப்.6- ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கூறினார். குடியாத்தம் நகரில் ஞாயி றன்று (பிப்.5) செய்தியாளர் களிடம் அவர் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில், எதிரணி யாக உள்ள பாஜக மற்றும் அதிமுக அவர்களுக்குள் ஏற் பட்ட குழப்பம் இன்னும் தீர வில்லை. வேட்பாளரை எப்போது தேர்ந்தெடுத்து அறிவிப்பாளர்கள் என்பதும் வேட்பு மனுத் தாக்கல் செய் வார்களா என்பதே நிச்சய மற்ற நிலை தான் ஏற்பட்டுள்ளது. மேலும் ஈரோடு இடைத்தேர் தலில் கிடைக்கப் போகும் தோல்வி அடுத்து வரும் நாடாளுமன்றத்தில் தோற்ப தற்கான தொடக்கமாகத்தான் அதிமுகவிற்கு இருக்கும் மத்திய பட்ஜெட்டில் நாட்டில் உள்ள பணக்காரர்கள் பணக்காரர்களாக ஆகும் திட்டங்கள் இருக்கிறதே தவிர ஏழை எளிய மக்கள், பெண்கள் வேலையில்லாத இளைஞர்கள் தினக்கூலி தொழிலாளர்களைப் பாதுகாக்க எந்த திட்டமும் இல்லை. தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை யில் நிதி ஒதுக்கீடு எதிர்பார்க் கப்பட்ட நிலையில், ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை, அடிக்கல் நாட்டி நான்கு ஆண்டுகள் முடிந்து விட்டது. தமிழ்நாட்டை வஞ்சிக்கிற தமிழ்நாட்டைப் புறக்கணிக்கிற ஆட்சியாகத் தான் மத்திய ஆட்சியுள்ளது என்றார் பால கிருஷ்ணன். பேட்டியின்போது மாநிலக் குழு உறுப்பினர் எஸ். டி.சங்கரி, மாவட்டச் செயலாளர் தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் ப.சக்திவேல், கே.சாமி நாதன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.