செங்கல்பட்டு, ஜன. 24- வெளிநாட்டு பல்கலைக்கழ கங்களை வணிக நோக்குடன் இந்தி யாவில் அனுமதிப்பதை கைவிட வேண்டும் என மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கோ.அரவிந்தசாமி தலை மையில் செங்கற்பட்டில் நடை பெற்றது. மாநிலச் செயலாளர் க.நிரு பன் சக்கரவர்த்தி, மத்தியக்குழு உறுப்பினர்கள் கா.பிருந்தா, சி.மிரு துளா, மாநிலத் துணைத் தலைவர்கள் தௌ.சம்சீர் அகமது, மு.தமிழ்பாரதி, செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் நரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் பல்கலைக் கழகத் தில் நடைபெறும் ஊழல்களை விசாரிக்கும் குழுவின் செயல்பாடு களை துரிதப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கும் உதவித் தொகைக்கான வருமான வரம்பை திருத்தியதை ரத்து செய்யவேண்டும், மௌலானா ஆசாத் உதவித் தொகை நிறுத்தம், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களின் கடன் வட்டி மானி யம் நிறுத்தம் அனைத்தையும் திரும் பப்பெற்றுக்கொண்டு மீண்டும் வழங்க வேண்டும்.
பச்சையப்பன் விவகாரம்
பச்சையப்பன் அறக்கட்டளை யில் நடைபெற்ற முறைகேடு களை உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், சென்னை சட்டக் கல்லூரி இடம் மாற்றத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை விரை வாக நடத்தி நீதி வழங்க வேண்டும். புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி களுக்கான கட்டிடங்களை உடனடி யாகவும் விரைந்தும் கட்டி முடிக்க வேண்டும், சட்டப் பல்கலைக்கழகம் கலந்தாய்வு முழுமையாக நிறைவு பெறுவதற்கு முன்பே தனியார் கல்லூரி இடங்களை விற்பனை செய்வதை தடுக்க வேண்டும், ஆமை வேகத்தில் நடைபெறும் கலந்தாய்வை உடனடியாக விரை வாக நடத்தி முடிக்க வேண்டும்.
போதைக்கு எதிராக...
பள்ளி-கல்லூரி மாணவர்களிடம் பெருகிவரும் போதை கலாச்சார பழக்கத்தை தடுக்க அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநில அளவிலான எஸ்.எல்.இ.டி பேராசிரியர் தகுதி தேர்வை 6 ஆண்டுகளாக நடத்தாமல் இருப்பதை உடனடியாக இந்த கல்வியாண்டிலேயே நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.