கோவை, ஜூன் 17- பல்வேறு அடக்குமுறைகளை சந் தித்து வளர்ந்த இயக்கம் திமுக. யாரும் இங்கு புற முதுகிட்டு ஓட மாட்டோம். மிரட்ட லுக்கு பணியாத மாநிலம் தமிழ்நாடு என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும் என கோவை பொதுக்கூட்டத் தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி., ஆவேச உரையாற்றினார். அவர் மேலும் பேசுகையில், சனா தன பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண் டும். செந்தில் பாலாஜி என்ன வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என இது வரை தெரிவிக்கவில்லை. சம்மன் கொடுக்காமல், வழக்கு பற்றி தெரிவிக்கா மல், கையெழுத்து போடுமாறு அம லாக்கத்துறையினர் நடத்தியுள்ளனர். அவர் தாக்கப்பட்டுள்ளார். மன உளைச்ச லுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி இதய வலியால் துடித்த போது, நடிக்கிறார் என நினைத்து அதிகாரிகள் அவரை பிடித்து தூக்கியுள்ளார்கள். அப் போது தலை கான்கீரிட் சிலாப்பில் அடித்த தில் தலையில் அடிபட்டுள்ளது. மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். 8 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியி ருப்பது என்ன அநியாயம்? 3 அடைப்பு கள் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இருதய நோயாளிக்கு ஓய்வு வேண்டும்.
ஆனால் அவரிடம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது. செந்தில் பாலாஜி உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. செந்தில் பாலாஜி போக்கு வரத்து துறையில் வேலை வாங்கி தர லஞ்சம் வாங்கியதாக எங்கும் நிரூபிக்க வில்லை. ஊழல் வழக்கிற்கும், சட்ட விரோத பண பரிவர்த்தனைக்கும் சம் பந்தம் இல்லை. அதிமுக ஆட்சியில் அளிக்கப்பட்ட புகாருக்கு, திமுக ஆட்சியில் தலைமை செயலகத்திற்குள் நுழைந்து மிரட்டி பார்க்கிறார்கள். அரவக்குறிச்சி தேர்த லில் தோற்று பின்னங்கால் தோளில் பட ஓடியவர். கொங்கு மண்டலத்தில் தேர் தல்களில் வெற்றி வாகை சூட காரணமாக இருந்தவர் செந்தில் பாலாஜி. கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவராக செந்தில் பாலாஜி விளங்குகிறார். 2015 ல் ஜெயலலிதா ஆட்சியில் போடப் பட்ட வழக்கை தூசி தட்டி எடுத்து வரு கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 11 சீட்டுக் காக அலைகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜி தலைமை யில் 11 இடங்களில் வெற்றி பெற்று முத லமைச்சர் ஆட்சிக்கு மீண்டும் ஒரு மகு டம் சூட்டுவோம். நாடாளுமன்ற தேர்தல் வெற்றி விழா, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா கோவையில் நடக்கும்” என்றார்.