போபால், நவ. 21 - டீ கடை வியாபாரி ஒருவர், தனக்கு வரவேண்டிய ரூ. 30 ஆயிரம் பாக்கியைக் கேட்டு, பாஜக எம்எல்ஏ-வின் காரை மறித்த சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற்றது. இத்தேர்தலில் மொத்த முள்ள 230 இடங்களில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றிபெற்று சுயேட்சைகள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது. அக்கட்சியின் மூத்த தலை வர் கமல்நாத் முதல்வரானார். ஆனால், 109 இடங்களில் வென்ற பாஜக, ஒன்றரை ஆண்டுகளுக்குள்- 2020 மார்ச்சில், குதிரை பேரம் மூலம் ஆளும்கட்சி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி குறுக்கு வழியில் அதிகாரத்திற்கு வந்தது. தற்போது 130 எம்எல்ஏ-க்களுடன் பாஜக தலைவர் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சி நடத்தி வருகிறார். காங்கிர சின் பலம் 114-இல் இருந்து 96 ஆக குறைந்து விட்டது. அடுத்தாண்டு 2023-இல் மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில்தான், 2018-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, பாக்கி வைத்த தொகை யையே பாஜக எம்எல்ஏ ஒருவர் இன்னும் தரவில்லை என்று டீ கடைக்காரர் கொந்தளித்த சம்பவம் நடந்துள்ளது. ம.பி. மாநில பாஜக எம்எல்ஏ-வாக இருப்பவர் கரண் சிங் வர்மா. செஹோர் மாவட்டத்திலுள்ள இச்சா வர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடு க்கப்பட்டவர். இவர், 2018-ஆம் ஆண்டு இத்தொகுதியில் போட்டி யிடும் போது, இச்சாவர் பகுதியி லுள்ள டீ கடை ஒன்றில் பாஜக தொண்டர்களுடன் டீ குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஆனால், அதற்குரிய பணத்தைத் தராமல் ரூ. 30 ஆயிரம் அளவிற்கு கடன்பாக்கி வைத்துள்ளார். பின்னர் எம்எல்ஏ-வும் ஆகி விட்ட கரண் சிங் வர்மா, டீ கடை பாக்கியை தர வில்லை. கடைக்காரர் பலமுறை அலையாய் அலைந்தும் பணம் வந்து சேரவில்லை. இதனிடையே, 2023-இல் அடுத்த தேர்தல் வரவுள்ளதால், எம்எல்ஏ-க்கள் அவரவர் தொகுதியில் சுற்றுப் பயணம் செய்ய வேண்டும் என்று பாஜக தலைமை கட்டளையிடவே, கரண் சிங் வர்மாவும் தனது இச்சா வார் தொகுதியில் சுற்றுப்பயணம் துவங்கினார். இவ்வாறு புறப்பட்ட வர் ஏற்கெனவே கடன் பாக்கியுள்ள கடைக்கே மீண்டும் வந்து டீ குடித்துள்ளார். வழக்கம்போல பணம் தராமல் சென்றுள்ளார். இத னால் ஆத்திரமடைந்த டீக் கடைக் காரர் எம்எல்ஏ-வின் காரை மறித்து சட்டையைப் பிடிக்காத குறையாத வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பாஜக எம்எல்ஏ-வை கடுமையாக சாடியுள்ளார். இதனை எதிர் பார்க்காத கரண் சிங் வர்மா, எந்த பதிலும் பேசமுடியாமல் டீக்கடை காரரின் வசவுகளை வாங்கிக் கொண்டு அப்படியே உறைந்து போயிருக்கிறார். சுற்றுப்பய ணத்தின் துவக்கமே அதிர்ச்சியாக அமைந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களிலும் பரவிய நிலை யில், பலரும் பாஜக எம்எல்ஏ-வின் செயலுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். கரண் சிங் வர்மா முன்னாள் அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.