புதுக்கோட்டை, டிச.26- புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளனூர் அருகே ஆதிதிரா விடர் மக்களுக்கான குடிநீரில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரை ஆய்வு மேற்கொண் டார். புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இவ் வூராட்சிக்குட்பட்ட இறையூர் கிரா மத்தின் வேங்கைவயல் தெருவில் 50-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடும்ப மக்கள் வசித்து வருகின்ற னர். அந்த பகுதி மக்களுக்கு விநி யோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள் ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி உள்ளது. இந்நிலையில், அந்த பகுதி யைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் 5 பேருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைவு ஏற்பட்டுள் ளது.
இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். அவர்களைப் பரி சோதித்த மருத்துவர்கள் அவர்கள் குடித்த குடிநீரில் ஏதும் பிரச்சனை இருக்கலாம் எனத் தெரிவித்துள்ள னர். இதனைத் தொடர்ந்து நீர்த் தேக்கத் தொட்டியில் திங்களன்று அப்பகுதி மக்கள் பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக் கள் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். சின்னதுரைக்கும், அதிகாரி களுக்கும் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, விவசாயத் தொழிலாளர் சங்க மாநி லத் தலைவர் ஏ.லாசர், குளத்தூர் வட்டாட்சியர் சக்திவேல், அன்ன வாசல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத் திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட னர். இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை தெரி விக்கையில், ‘‘மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலந்துள்ள சம்பவம் ஒட்டு மொத்த மக்களிடையே அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.
ஆதிதிராவிடர் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் தொடர்ந்து வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த இழி வான சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து இதுபோன்ற இழிவான சம்பவம் தொடராமல் இருக்க உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என்றார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், ‘‘பல ஆண்டு களாக குடிநீர் வசதியின்றி இருந் தோம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் 2016-17-ஆம் ஆண்டில் பிரத்யேகமாக குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. தொட்டியின் மேலுள்ள மூடி யைத் திறப்பது பெரியவர்களால் மட்டுமே முடியும், விளையாட்டுத் தனமாக சிறுவர்கள் யாரும் செய்தி ருக்க வாய்ப்பில்லை.எனவே, வேண்டுமென்றே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாக சந்தே கிக்கிறோம்’’ என்றனர். இதனைத் தொடர்ந்து குடிநீர்த் தொட்டியில் இருந்த தண்ணீர் உட னடியாக வெளியேற்றப்பட்ட தோடு, அப்பகுதி மக்களுக்கு மாற் றுக் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும், காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை அதிகாரிகள் நடந்துள்ள சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.