states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 13-ஆம்  தேதி தொடங்கிய நிலை யில்,  மொழிப் பாடங்க ளுக்கான தேர்வை 50,000 மாணவர்கள் எழுத வில்லை. தேர்வு எழுத வராத  மாணவர்கள் குறித்து  விசாரிக்கப் பள்ளி களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ள நிலையில்,   50,000 மாணவர்கள் மீண் டும் தேர்வு எழுத நட வடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

ரூ.3,269 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர் பான பணமோசடி வழக் கில் சக்தி போக் புட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு நர் கேவல் கிரிஷன் குமா ருக்கு தில்லி உயர்நீதிமன் றம் ஜாமீன் வழங்கியது.

கடந்த 2 நாட்களாக முல்லைப் பெரியாறு நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 43.6 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 12.0 மில்லி மீட்டரும் என   மழையும் பெய்துள்ளது. இதனால் முல்லை பெரி யாறு அணை நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், கம்பம் பள்ளத்தாக்கு விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.

ராணிப்பேட்டை மாவட்  டம் வாலாஜாபேட்டை யை  அடுத்த கணபதி நகர் பகுதியில் விக்னேஷ் (19)  என்ற கல்லூரி  மாணவர் இடி தாக்கி உயிரிழந்தார்.

அதிகப்படியான நிதி வைப்பு அல்லது கடன்  வளர்ச்சியானது வங்கிக் கட்டமைப்புக்கு நல்லது அல்ல என  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகச் செய்திகள்

கிரெடிட் சுவிஸ் வங்கியின் பங்கு விலை கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. இந்த முதலீட்டு வங்கிக்கு ரொக்கமாகப் பணம் தேவைப்பட்டால் உடனடியாகத் தரத் தயாராக இருப்பதாக ஸ்விட்சர்லாந்தின் மத்திய வங்கி கூறியுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை முதல் இந்த வங்கியின் பங்குகள் விலை சரிந்துள்ளது. ஸ்விட்சர் லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான கிரெடிட் ஸ்விஸ் வங்கி உலக முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியின் நாணயமான லிரா அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பில் சரிவைச் சந்தித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 70 விழுக்காடு அளவுக்கு மதிப்பை லிரா இழந்திருக்கிறது. கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்வு துருக்கியில் ஏற்பட்டுள்ளது. மக்கள் கடுமை யான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில்தான் மே 14 ஆம் தேதியன்று புதிய ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது.

2023 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் நிலைமை மேம்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் ஆப்பிரிக்க பொருளாதார ஆணையம் கணித்துள்ளது. பிற நாடுகளை விட ஆப்பிரிக்க நாடுகள் நிலைமை மோசமாகயிருக்காது என்று கூறியுள்ள ஆணையம், 2022 ஆம் ஆண்டில் 3.6 விழுக்காடு ஆக இருந்த ஆப்பிரிக்கப் பொருளாதாரம், 2023 ஆம் ஆண்டில் 3.9 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.