சென்னை, டிச. 6 - அம்பேத்கரை நினைவு கூறுகிற அனைவரும், சாதி ஒழிப்பு, தீண்டா மைக்கு முடிவு கட்டும் போராட்டத் தில் ஒன்றிணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அறைகூவல் விடுத்துள் ளார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் செவ்வாயன்று (டிச.6) அணுசரிக்கப்பட்டது. இதனையொட்டி சென்னை சைதாப் பேட்டை எம்.சி.ராஜா விடுதியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அம்பேத்கரின் நினைவு நாளன்று, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாக வும் உள்ளது. வரலாற்றை சனாதன சக்திகள் பின்னி பிணைத்து வைத்துள் ளார்கள் என்பதற்கு உதாரணமாக இந்நிகழ்வு உள்ளது. மதவெறி, சனா தன சக்திகள் இருக்க கூடாது, அனை த்து மதங்களை சேர்ந்தவர்களும் சகோ தரர்களாக இணைந்து வாழ வேண்டு மென்று அம்பேத்கர் அரசியல் சாச னத்தை உருவாக்கி கொடுத்தார்.
அவரின் நினைவு நாளில், பாபர் மசூதியை இடித்து மத ஒற்றுமையை எப்போதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஆர்எஸ்எஸ், பாஜக, சனாதன சக்திகள் சவால்விடுகின்றன. இந்திய வரலாற்றில் மிகச்சிறந்த சிந்தனையாளர், வரலாற்று அறிஞர், சட்ட நிபுணர் என பன்முக ஆளுமை கொண்டவர் அம்பேத்கர். அவர் உயர்த்தி பிடித்த, சனாதான சக்தி களை வீழ்த்துகிற, மதவெறி சக்தி களை அகற்றுகிற, சாதிக்கு ஆணி வேராக உள்ள நிலப்பிரபுத்துவ உணர்வுகளை அறுத்து எரிகிற உணர்வுகளை மேம்படுத்தும் நாளாக இந்நாளை கடைபிடிக்கிறோம். பிடிவாதமாக... அம்பேத்கரை நாவில் மட்டும் கொண்டாடாமல், உள்ளார்ந்த முறை யில் அவரின் கொள்கைகளை இந்தி யாவில் அமல்படுத்த மார்க்சிஸ்ட் கட்சி பிடிவாதமாக செயல்படுகிறது. சாதி ஒழிப்பு போர்க்களத்தில், தீண்டாமை ஒழிப்பு களத்தில் மற்ற கட்சிகளை விட தலைநிமிர்ந்து நிற்கிற சாதனைகளை மார்க்சிஸ்ட் கட்சி படைத்துள்ளது. அம்பேத்கரை நினைவுகூர்கிற அனை வரும், சாதி கட்டமைப்பு ஒழிப்பு, தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டும் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கவுரவத் தலைவர் பி.சம்பத், தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநி லக்குழு உறுப்பினர் கே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.