states

மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்குக!

சென்னை, நவ.15-  மழைநீர் புகுந்து பாதிக்கப்பட்ட அனைத்  துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்  குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்  நாடு மாநிலக்குழுக் கூட்டம் நவம்பர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலையில்  மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குண சேகரன் தலைமையில் நடைபெற்று வரு கிறது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்  பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நவம்பர் 15 செவ்வாயன்று நடைபெற்ற முதல்  நாள் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவ மழை தொடக்கத்திலேயே கூடுதலாக பெய்  துள்ளது. குறிப்பாக,  மயிலாடுதுறை மாவட் டத்தில் ஒரே நாளில் 122 சென்டிமீட்டர் பெய்து மிகப்பெரிய பாதிப்புகளை அந்த மாவட்டத் தி ல் ஏற்படுத்தியுள்ளது.  சுமார் 2 லட்சம் ஏக்கரில் நெல்பயிர் பாதிப்பு, கரும்பு, வாழை, தோட்டக்  கலை பயிர்கள் என விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, தஞ்சாவூர், கடலூர், மயிலாடு துறை, திருவாரூர், திருவள்ளூர், செங்கல் பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்ப லூர் ஆகிய மாவட்டங்களில் பயிர் பாதிப்பு பெருமளவு ஏற்பட்டுள்ளது. பல லட்சக்கணக்  கான வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. கால்நடை பாதிப்பு, மனித உயிரி ழப்பு போன்ற சம்பவங்களும் மாநிலத்தில் நடைபெற்றுள்ளன. சென்னை போன்ற நக ரங்களில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேற்  கொண்ட பணிகள் காரணமாக, கடந்த காலத்  தைப் போல தண்ணீர் தேங்கவில்லை என்பது  ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். வட கிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் என்ற நிலையில், வடிகால் பணிகளை போர்க்  கால அடிப்படையில் முழுமையாக நிறை வேற்றுவது அவசியம்.  மேலும், தமிழ்நாடு அரசு பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்திட உடனடியாக உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைப்பதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். நெல்லுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம், மற்ற பயிர்களுக்கு பாதிப் பின் அளவிற்கு ஏற்ப இழப்பீடு வழங்க முன்  வர வேண்டும். 

 தீர்மானிக்கப்பட்டுள்ள இழப்பீடு தொகையின் அளவை உயர்த்துவதற்கு அரசு  முயற்சி எடுக்க வேண்டும். அறிவிக்கப்பட் டுள்ள நிவாரணத் தொகை போதுமானது அல்ல. வீடுகளில் தண்ணீர் புகுந்து, வீட்டு உபயோக பொருட்கள், மின்சாதனங்கள் உட்பட பாதிக்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு  வீட்டிற்கும் தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்க  வேண்டும். பகுதியாகவோ முழுமையாகவோ இடிந்த வீடுகளுக்கு ரூ.15 ஆயிரம்  வழங்கிட வேண்டும். பயிர் காப்பீட்டுக்கான பிரிமியம்  செலுத்தும் காலத்தை இன்னும் இரண்டு  வாரங்களுக்கு நீட்டிப்பதோடு அதற்கான பிரி மியத் தொகையை தமிழக அரசே செலுத்திட வேண்டும். கால்நடைகள் பாதிப்புக்கு கூடு தல் இழப்பீடு வழங்க வேண்டும்.  மேலும், மருத்துவ முகாம் நடத்துவது, நடமாடும் மருத்  துவ வாகனங்களை தேவையான அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்புவது போன்ற நடவ டிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலக்குழு வலியுறுத்துகிறது. இயற்கை பேரிடரிலிருந்து மக்களை பாது காக்க தேவையான நிதியை ஒன்றிய அரசிட மிருந்து பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான பேரிடர் நிதியை வழங்க முன்வர வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.