சென்னை, மார்ச் 6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத் துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தனியார் நிதி நிறுவன மோச டிகள் என்பது ஒரு தொடர் கதையாகி வரு கிறது. ஆங்காங்கே புற்றீசல் போல புதிது புதிதாக முளைக்கும் போலியான நிறுவ னங்கள் மக்களை ஏமாற்றி பல்லாயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்து விட்டு தலைமறை வாகி விடுகின்றனர். இந்நிறுவனங்களிடம் பணத்தை இழக்கும் மக்கள் செய்வதறி யாது விழிபிதுங்கி நிற்பதும், சிலர் தற் கொலை செய்து கொள்வதும் வழக்கமான ஒன்றாகவே மாறியுள்ளது. எனவே இத்தகைய போலியான நிதி நிறு வனங்களின் மீது உரிய சட்டப்பூர்வமான நட வடிக்கை எடுப்பதோடு, அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் பறிமுதல் செய்திட வேண்டும். அண்மையில் தமிழ்நாட்டின் வட மாவட் டங்களை மையமாக வைத்து இயங்கி வந்த ஆரூத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், விஆர்எஸ் எனும் பெயரில் இயங்கி வந்த போலி நிதி நிறு வனங்கள் சுமார் ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மக்களிடம் கொள்ளையடித்த தோடு நிறுவனங்களையும் மூடிவிட்டு சென்று விட்டனர். இந்நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இந்நிறுவனங் களை நடத்தி வந்தவர்கள் தேடப்படும் குற்ற வாளிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மக்களின் முதலீட்டிற்கு அதிக வட்டி தரு வதாகவும், ஊக்கத்தொகை மற்றும் தங்கம் வழங்குவதாகவும் ஆசை வார்த்தைகளை காட்டி லட்சக்கணக்கான மக்களை இந்நிறு வனங்கள் ஏமாற்றியுள்ளன. துவக்கத்தில் மாதாந்திர சீட்டு நடத்துவதாக கூறி அரசிடம் உரிமம் பெறும் நிறுவனங்கள் நாளடைவில் இத்தகைய சட்ட விரோத மோசடிகளில் ஈடு பட்டு மக்களை ஏமாற்றி வருவது வழக்கமாக உள்ளது.
இத்தகைய போலியான நிதி நிறுவனங்க ளுக்கு ஒரு சில அதிகாரிகளும், அரசு பொறுப்பில் உள்ளவர்களும் துணை நிற்ப தாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆரூத்ரா நிறுவனத்திடம் பாஜக தலைவர் அண்ணாமலை பணம் பெற்றதாக பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி யுள்ளன. எனவே, இத்தகைய போலி நிதி நிறுவ னங்களின் மீது உறுதியான சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதோடு, மோசடி நிறு வனங்களுக்கு உதவி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல அந்நிறுவனங்களுக்கு சொந்தமான நேரடி யான மற்றும் பினாமி சொத்துக்கள் அனைத் தையும் உடனடியாக பறிமுதல் செய்வ தோடு, பணத்தை இழந்த மக்களுக்கு உரிய இழப்பீட்டையும் பெற்றுத் தர வேண்டும். மேலும் ஆங்காங்கே புதிதாக துவங்கப் படுகிற இத்தகைய போலியான நிறுவனங் களை துவக்கத்திலேயே கண்டறிந்து அவர் களின் செயல்பாட்டை உடனடியாக முடக்கு வதற்கான அனைத்து விதமான உறுதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.