states

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக!

சென்னை, மே 3 - ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை களை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள் ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 26.4.2022 முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அகவிலைப்படி என்பது ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தின் ஒரு பகுதியாகும். ஆனால் போக்குவரத்து கழக ஓய்வூதி யர்களுக்கு கடந்த 2015 முதல் அகவிலைப்படி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. சுமார் 6 ஆண்டு காலம் ஒரே ஓய்வூதி யம் பெற்று வருகின்றனர். இது எவ்விதத்திலும் நியாயமற்றது.  எனவே, போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை உடனடியாக வழங்கிட வேண்டும்.

2020 மே மாதத்திற்கு பின் மரணமடைந்த, விருப்ப பணி ஓய்வுபெற்ற ஊழியர்களது ஓய்வுகால பலன்கள் வழங்கப்படவில்லை. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு மருத்துவ  காப்பீடும் வழங்கப்படவில்லை. தங்களது உழைப்பின் மூலம் போக்குவரத்து கழக வளர்ச்சிக்கு பாடுபட்ட இவ்வூழியர் களது நியாயமான கோரிக்கை அஇஅதிமுக அரசால் பல ஆண்டு காலம் மறுக்கப்பட்டு வந்துள்ளது. ஏற்கனவே தொழிற்சங்கங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்திய போதும், அஇஅதிமுக அரசு இத்தொழிலாளர்களின் நியாய மான கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அரசு தங்களது பிரச்சனைக்கு தீர்வு காணும் என அமைதி யான முறையில் தங்களது கோரிக்கையை வற்புறுத்தி போராடி வருகின்றனர். ஏற்கனவே திமுக தனது தேர்தல் அறிக்கையிலும் இக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அறிவித்துள்ளது. எனவே, பல்லாண்டு காலம் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி பணி ஓய்வு பெற்று தற்போது உடல்நிலை பாதிப்புக்குள்ளாகி, குடும்ப சுமைகளும் அதிகரித்துள்ள நிலையில் இவர்களது நியாயமான கோரிக்கையினை உடனடி யாக நிறைவேற்றித் தர வேண்டுமென முதலமைச்சரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.