சென்னை, ஜூன் 6- ஒன்றிய துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்கு வரத்துத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோ வால் சென்னை துறை முகத்திலிருந்து இலங்கைக்கு இந்தியாவின் பயணிகள் கப்பலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோர்டேலியா எம்பிரெஸ் என பெயரிடப்பட்ட இந்த சொகுசு கப்பல் ஜூன் 7ஆம் தேதி இலங்கை யின் அம்பாந்தோட்டை துறைமு கத்தை சென்றடையும். அங்கி ருந்து திரிகோணமலைக்குச் சென்று ஒரு நாள் அங்கு நிறுத்தப் பட்டிருக்கும். பின், ஜூன் 9ஆம் தேதி மறுமார்க்கமாக சென்னைக் குத் திரும்பும். கப்பல் இயக்கத்தைத் தொடங்கி வைத்து உரை யாற்றிய அமைச்சர் சர்பானந்தா சோனோவால், “நம் நாட்டில் கப்பல் சுற்றுலாவை மேம்படுத்து வது பிரதமர் மோடியின் தொலை நோக்குத் திட்டமாகும். இதற்காக சென்னை துறைமுக ஆணைய மும், தமிழ்நாடு அரசின் சுற்றுலாத் துறையும் எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டுக்குரியவை” என்று அமைச்சர் குறிப்பிட்டார். “மும்பையில் ரூ.5,000 கோடி யில் சர்வதேச கப்பல் முனையத்தை கட்டும் பணி தொடங்கியுள்ளது” என்றும் அவர் கூறினார். இந்த கப்பல் அடுத்த நான்கு மாதங்களில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 50,000 பயணிகளை ஏற்றிச் செல்லும் என கப்பலை இயக்கும் கோர்டேலியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த கப்பலில் ஆடம்பர ஷாப் பிங் பகுதி, பப்கள், நீச்சல் குளம், உணவு நீதிமன்றம், சூதாட்ட விடுதி, விளையாட்டு அரங்கம், ஸ்பா, திரையரங்கம் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன. சென்னையில் இருந்து இலங்கைக்கு 3 நாள், 4 நாள் அல்லது 5 நாள் தங்கும் பயண வாய்ப்புகள் உள்ளன. பயணிகள் இவற்றில் ஒன்றைத் தேர்ந் தெடுத்து இந்தக் கப்பலில் சென்று வரலாம்.