42 வீடியோக்களை பரப்பிய அமன்குமார் பீகாரில் கைது!
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலி வீடியோ வெளியிட்டு வதந்தி கிளப்பிய, பீகாரின் ஜமுன் மாவட்டத்தைச் சேர்ந்த அமன் குமாரை பீகார் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனை பீகார் கூடுதல் டிஜிபி ஜிதேந்திர சிங் கங்குவார் உறுதி செய்துள்ளார். “தமிழ்நாடு தொடர்பாக வதந்தி பரப்பியதாக மேலும் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. புரளி யை கிளப்பினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் ஜிதேந்திர சிங் கங்கு வார் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அமன்குமார், முகநூலில் 9 வீடியோ, டுவிட்டர், யூடியூப்பில் தலா 15 வீடியோ, ஜி மெயிலில் 3 வீடியோக்கள் என 42-க்கும் மேற்பட்ட வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அவர் தற்போது கைது செய்யப்பட்டு இருப்பது டன், ராகேஷ் திவாரி, யுவராஜ்சிங் ராஜ்புத், மணீஷ் காசியாப் ஆகிய 3 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கானாவிலும் ஒருவர் கைது!
பீகாரைச் சேர்ந்த ரூபேஷ்குமார் என்ப வர் தனது டுவிட்டர் கணக்கில் போலி வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வந்த நிலையில், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் ரூபேஷை தொடர் புக்கொண்டு போலி வீடியோக்களை நீக்க அறிவுத்தியிருந்தனர். போலீசாரின் அறிவுறுத்தலை ரூபேஷ்குமார் கண்டு கொள்ளாத நிலையில், அவர் மீது போலீஸ் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் ரூபேஷ் குமார் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் கைது செய் யப்பட்டுள்ளார்.
பாட்னா, மார்ச் 7- ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமாரை, திமுக பொருளாளரும், அக்கட்சியின் நாடாளு மன்றக்குழுத் தலைவருமான டி.ஆர். பாலு செவ்வாயன்று நேரில் சந்தித்துப் பேசினார். இடம்பெயர் தொழிலாளர்கள் விவகா ரத்தில் பாஜகவினர் வதந்திகளை பரப்பிய நிலையில், இடம்பெயர் தொழிலாளர் பாது காப்பு விஷயத்தில் தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, இந்தச் சந்திப்பின்போது, பீகார் மாநில முதல்வரிடம் டி.ஆர். பாலு நேரில் எடுத்துரைத்தார். மேலும், இவ்விவகாரத்தில் பீகார் முதல்வ ருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழு திய கடிதத்தையும், நிதிஷ்குமாரிடம் டி.ஆர். பாலு வழங்கியுள்ளார். பீகார், உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ் தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநி லங்களை சேர்ந்த இடம்பெயர் தொழிலா ளர்கள்,
குறிப்பாக பீகார் மாநிலத்தவர் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தாக்கப்படுவ தாக சமூகவலைதளங்களில் அண்மையில் தகவல்கள் பரப்பப்பட்டன. சில வீடியோ காட்சி களும் பதிவேற்றப்பட்டன. இது நாடு முழுவதும் சர்ச்சையாக மாறியது. இடம்பெயர் தொழிலா ளர்களின் குடும்பத்தினர் அச்சம் அடைந்தனர். ஆனால், சமூகவலைதளங்களில் பரப்பப் பட்ட செய்தி மொத்தமும் வதந்தி; வீடியோக்கள் அனைத்தும் போலி, வழக்கம்போல இந்த மோசடி வேலையைச் சேர்ந்தவர்கள் பாஜக-வினர்தான் என்பது வெகுவிரைவாகவே வெளிச்சத்திற்கு வந்தது. பாஜகவின் சதிகளை, பீகார் சட்டப்பேர வையிலேயே தோலுரித்துக் காட்டிய அம் மாநில துணைமுதல்வர் தேஜஸ்வி, பீகாரைச் சேர்ந்த இடம்பெயர் தொழிலாளர்கள் ஒரு வர் கூட தாக்கப்படவில்லை. அவர்கள் தமிழ் நாட்டில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று பகிரங்கமாக அறிவித்தார். இந்த நிலையில் இடம்பெயர்தொழி லாளர் விவகாரத்தில் கிளப்பி விடப்படும் வ தந்தி குறித்து, பீகாரிலுள்ள மக்களுக்கு தெளிவு களை அளிக்கும் வகையில், பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் நகலை, திமுக பொருளா ளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர். பாலு பாட்னா வுக்கே சென்று முதல்வர் நிதீஷ் குமாரிடம் செவ்வாயன்று வழங்கியுள்ளார்.