சென்னை, ஜூன் 17- மாநகராட்சி -நகராட்சிப் பணி களில் அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்று வலி யுறுத்தி சென்னை மாநகராட்சி இயக்குநரிடம் சிஐடியு நேரில் மனு அளித்தது. தமிழ்நாடு முழுவதுமுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் தூய்மைப் பணிகளுக்காக அவுட்சோர்சிங் முறையில் 1.6.2023 முதல் போடப்பட்ட ஒப்பந்தங்களால் பல வருடங்களாக குறிப்பாக கொரோனா முடக்க காலத்தில் அர்ப் பணிப்போடு பணிகளைச் செய்த தினக்கூலி தூய்மை பணியாளர்கள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். இந்த ஒப்பந்தங்களில் விதிமுறை களுக்கு மாறாக ஆள் குறைப்பு, ஊதிய குறைப்பை ஒப்பந்ததாரர்கள் செய்து வருகின்றனர். 21 முதல் 50 என தூய்மைப் பணி யாளர்களுக்கான வயதை நிர்ண யம் செய்திருக்கிறார்கள். 50 வயதுக்கு மேற்பட்டவர்களை வேலையிலிருந்து நீக்கம் செய்கி றார்கள். அதோடு மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மை பணி யாளர்களுக்கான தினசரி ஊதியம் நிர்ணயம் செய்வதில், தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர் உள்ளிட்ட உள்ளாட்சி ஊழியர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62 (2டி)ஐ பின்பற்றாமல், ஊதியங்களை குறைத்து நிர்ணயம் செய்துள்ளார்கள்.
சமூக பாதுகாப்பு திட்டங்க ளான இபிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்வதிலும், ஒப்பந்த நிறுவனங்கள் தங்கள் பங்குத் தொகையை செலுத்தாமல், தூய்மைப் பணியாளருக்கு நிர்ண யம் செய்த தினசரி ஊதியத்தி லேயே மொத்தமாக பிடித்தம் செய்கிறார்கள். மேற்கண்ட விதிமுறை மீறல்களை சுட்டிக்காட்டி நகராட்சி நிர்வாகங்களிடம் கேட்கிற போது ஆணையாளர்களிடம் சரியான பதில் இல்லை. எல்லாமே “நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின்” உத்தர வுப்படி தான் நடக்கிறது என்று பொதுவாக கூறுகிறார்கள். இதனால் தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை செய்து வந்த தினக்கூலி ஒப்பந்த ஊழி யர்கள் வேலை நிறுத்தம், உள்ளி ருப்பு போராட்டம், மறியல் என போராடி வருகின்றனர். பல இடங்களில் ஒப்பந்த தாரர்கள், நாங்கள் சொல்லுகிறபடி வேலை செய்யாவிட்டால் வட மாநில தூய்மைப்பணியாளர்களை வைத்து வேலை செய்வோம் என்று மிரட்டவும் செய்கிறார்கள். ஊதிய குறைப்பு, ஆட்குறைப்பு, மிரட்டல் போன்ற செயல்களை ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் எனவே, ஒப்பந்த தொழிலாளர்கள் சட்டத்தையும், தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய அரசாணையையும் மீறி நடக்கிற மாநகராட்சி, நகராட்சிகளின் அவுட்சோர்சிங் ஒப்பந்ததாரர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி களில் தூய்மை பணிக்கு அவுட்சோர் சிங் முறையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி சிஐடியு மாநில மையத்தின் சார்பில் மாநிலச் செய லாளர் கே.சி.கோபிக்குமார், சென்னை நகராட்சி இயக்குநரை சந்தித்து மனு அளித்தார் என்று சிஐடியு மாநிலப் பொதுச் செயலா ளர் ஜி.சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.