states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

  1. பருவநிலை மாற்றம் எதி ரொலியால் 30நாடுகளில் காலரா பரவியுள்ளது என  உலக சுகாதார அமைப் பின் காலரா மற்றும் தொற்  றியல் வியாதிகளுக்கான குழு தலைவர் பிலிப் பார்போசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  2. பார்வையற்ற மாற்றுத் திற னாளிகளுக்கான உலகக்  கோப்பை டி-20 கிரிக் கெட் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை 121 ரன்கள் வித்தியா சத்தில் வீழ்த்தி 3-வது முறையாக ( 2012,2017 ,2022) கோப்பையை வென்று சாதனை படைத்  துள்ளது. 
  3. தஞ்சாவூர் -  திருக்கருக்கா வூர் மார்க்க அரசு பேருந் தில் இலவச பயணத்தை சுட்டிக்காட்டி  மூதாட்டி யை தரைகுறைவாக பேசிய நடத்துநர் ரமேஷ் குமார் (43) இடைநீக்கம் செய்யப்பட்டார்.
  4. 111 ஆண்டுகளில் இல் லாத அளவிற்கு சிலி நாட்டில் வெப்பநிலை நிலவுவதால் காட்டுத் தீ  வேகமாக பரவி வருகிறது. இதுவரை 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசமாகியுள்ளன.
  5. விளம்பரதாரர்கள் அடுத்  தடுத்து வெளியேறிய தால் டுவிட்டர் தளத்தின் வருவாயில் பல்வேறு சிக்கல் உருவாகியுள்ளது.
  6. கியூபாவுக்கு வழக்கமான விமானப் பயணங்களைத் தொடங்க மெக்சிகோ திட்டமிட்டுள்ளது. மெக்சிகோவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டிஜூவானா விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படும். விவா ஏரோபஸ் விமானப் பயண நிறுவனம் இந்தப் பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறது. அடையாளமாக முதல் விமானம் கியூபாவின் தலைநகர் ஹவானாவுக்கு தனது பயணத்தை மேற்கொண்டது. விமானப் பயண சேவையை மேலும் பலப்படுத்துவது என்று இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளன.
  7. இராக் நாட்டின் முன்னாள் பிரதமர் முஸ்தபா அல் காதிமி விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளி யாகியுள்ளன. ஈரானின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தளபதி காசிம் சொலிமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்கத் தூதகர பாதுகாப்பில் தற்போது காதிமி இருக்கிறார். கொலையில் அவருக்குள்ள பங்கு பற்றி விசாரணை நடத்துவோம் என்று அரசு வழக்கறிஞர்களில் ஒருவரான பாசில் ஜரிஜாவி கூறியுள்ளார்.
  8. சிரியா, துருக்கியே மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றாக அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பைத் தான் மறுக்கவில்லை என்று துருக்கியே ஜனாதிபதி ரிசெப் தய்யீப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இத்தகைய பேச்சு வார்த்தையை பல கட்டங்களாக நடத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ள அவர், முதலில் உளவுத்துறை அமைப்புகளில் துவங்கி, பாதுகாப்புத்துறை அமைச்சர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர் கள் என்று நடத்தி, நிறைவாக நாடுகளின் தலைவர்கள் சந்திக் கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.