states

மீட்பு பணிகளை துரிதப்படுத்த முதலமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 20- தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி  மலைப் பகுதிகளில் உள்ள கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி பகு தியில் பலத்த மழை காரணமாக அதிக  அளவில் வெள்ளம் தேங்கி நிற்பதாக  மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து அந்தப் பகுதி களுக்கு பேரிடர் மீட்புக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு மீட்புப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் கனமழை பெய்துவரும் மேற்  குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து மாவட்டங்களுக் கும் பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பி  வைக்கப்பட்டு மீட்பு பணிக்காக தயார் நிலையில் உள்ளனர். இந்நிலையில் கனமழை பெய்து வரும் கோவை, நீலகிரி உள்ளிட்ட  மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி களை சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களு டன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  சனிக்கிழமை, தலைமை செயல கத்தில் இருந்து காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.  ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்களி டம், அந்தந்த மாவட்டங்களில் ஏற்பட்  டுள்ள வெள்ள பாதிப்புகள் தொடர் பாகவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மீட்பு பணிகள் தொடர்பாகவும் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தது டன், கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை உடனடி யாக துரிதப்படுத்த வேண்டும். நிவா ரண மையங்களை அமைத்து மழை யால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை அங்கு பாதுகாப்பாக தங்க வைக்க வேண்டும் என்று மீட்புப் பணிகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினார்.  ஏற்கெனவே பேரிடர் மீட்புப் படை யினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மீட்புக் குழு வினர் தேவைப்பட்டாலும் உடனடி யாக அனுப்பி வைக்க அரசு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.  புலிகள் காப்பகம் மூடல் கனமழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் ஜூலை 22 வரை  மூடப்படுவதாக வனச் சரக அலுவலர் தெரிவித்துள்ளார்.