states

‘ராமர் பாலம்’ விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்!

ராய்ப்பூர், டிச. 26 - ராமர் பாலம் விவகாரத்தில் மக்க ளைத் தவறாக வழிநடத்தியதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் வலியுறுத்தியுள்ளார். ராமர் பாலம் பற்றிய ஆய்வு முடிவுகள் குறித்து, ஹரியானாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் கார்த்திகேய சர்மா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விகளுக்கு கடந்தவாரம் பதி லளித்த விண்வெளி மற்றும் அறி வியல் தொழில்நுட்பத்துறை இணை யமைச்சர் ஜிதேந்திர சிங், “இராமேஸ் வரம் - தலைமன்னார் இடையே உள்ள திட்டுகளை சிதைந்த ராமர் பாலத்தின் பகுதி என்றோ, எச்ச சொச்சம் என்றோ கூற முடியாது. இந்திய விண்வெளித்துறை செயற்கை கோள் மூலம் ஆய்வு செய்ததில் ராமர் பாலம் இருந்தது என்று துல்லியமாக கூற முடியவில்லை” என்று தெரிவித்திருந்தார். “நாம் நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஹரப்பா நாகரிகத்தை கூட கண்டு பிடித்துள்ளோம். ஆனால், ராமர் பாலம் என்பது சுமார் 18 ஆயிரம் ஆண்டு களுக்கு முந்தைய வரலாறு என்பதால்  இதுகுறித்து ஒரு இறுதி முடிவுக்கு வர  இயலவில்லை” என்றும் கூறியிருந் தார். அமைச்சரின் இந்த அறிக்கை, ராமர் பாலம் விவகாரத்தில் முக்கிய மான ஒன்றாக அமைந்தது.  ஏனெனில், ‘ராமர் பாலம்’ என்ற  பெயரைச் சொல்லித்தான் பாஜக உள்ளிட்ட சங்-பரிவாரங்கள் அராஜகங்க ளை அரங்கேற்றி வந்த னர். மன்னார் மற்றும் பாக்ஜல சந்தி இடையே இயற்கையாக அமைந்த மண்திட்டு உள்ளது. இந்த மண்திட்டை ராமர் பாலம் என்று கூறிய  பாஜக-வினர், இங்கு 83 கி.மீ.  ஆழத்துக்கு கால்வாய் வெட்டும்  சேது சமுத்திரத் திட்டத்தை அமல் படுத்தினால், கடவுள் ராமர் கட்டிய பாலம் சேதமடைந்து விடும் என்று காட்டுக்கூச்சல் போட்டனர்.

“ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா உள்ளிட்ட முக்கியத் துறை முகங்களுக்கு வரும் கப்பல்கள் அனைத்தும் தற்போது இலங்கையை சுற்றித்தான் வருகின்றன. இதனால் அதிகமான எரிபொருள் செலவாகிறது. பயண நேரமும் அதிகமாகிறது. சேது சமுத்திரத் திட்டத்தை அமல் படுத்தினால், இந்தியா கணிசமான அந்நிய செலாவணியை சேமிக்க முடியும். கப்பல்கள் சுமார் 30 மணி நேரத்திற்கு முன்னதாகவே இந்திய துறைமுகங்களையும் வந்தடையும். மிக முக்கியமாக தமிழ்நாட்டின் தூத்துக்குடி துறைமுகம் மிகப்பெரிய வளர்ச்சி பெரும். அதன்மூலம் தொழில்  வளர்ச்சி - வேலைவாய்ப்பு ஏற்படும்”  என்று எவ்வளவோ எடுத்துரைக்கப் பட்டது. ஆனால், 2005-இல் துவங்கிய சேது சமுத்திரத் திட்டத்தை  நிறைவேற விடாமல் பாஜக-வினர்  தடுத்து நிறுத்தினர். தென்தமிழகத் தின் தொழில் வளர்ச்சி - வேலை வாய்ப்பையும் முடக்கினர்.

ஆனால், பாஜக-வைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சரே, இராமேஸ்வரம் - மன்னார் இடையே இருக்கும் மண்  திட்டை ராமர் கட்டிய பாலம் என உறு திப்படுத்த முடியவில்லை என்று  தற்போது கூறிவிட்டதால், பாஜக-வினர்  இவ்வளவு காலம் மேற்கொண்டு வந்த அனைத்தும் பொய்ப்பிரச்சாரம், சதிவேலையைத் தவிர வேறொன்று மில்லை என்பது அம்பலமாகி இருக்கிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் முதல்வர்  பூபேஷ் பாகேல் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “ராமர் பால விவகாரத்தில் மக்களைத் தவறாக வழிநடத்தியதற்காக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும். கடந்த காலங்களில் காங்கிரசும் ‘ராமர் பாலம் என்று ஒன்று கிடையாது’ என்றுதான் கூறியது. ஆனால் எங்களை ராமர் எதிர்ப்பாளர்களாக பாஜகவினர் சித்தரித்தனர். ஆனால் தற்போது ராம ரின் உண்மையான பக்தர்கள் என்று  சொல்லிக்கொள்பவர்களே நாடாளு மன்றத்தில் இப்பாலம் உண்மை யில்லை என்று கூறியிருக்கிறார்கள். தற்போது இவர்களை எந்த பட்டிய லில் சேர்ப்பது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.  மேலும், பாஜக அமைச்சரின் இந்த கருத்துக்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பும் எதிர்வினை எதுவும் ஆற்றாததை சுட்டிக்காட்டியிருக்கும் பூபேஷ் பாகேல், “ஆர்எஸ்எஸ்-காரர்கள் உண்மையான ராம பக்தர்களாக இருந்தால் அவர்கள் ஒன்றிய அரசை விமர்சித்திருப்பார்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.