states

பெயர்ப் பலகைகளுக்கு கட்டணம்: வணிகர் பேரமைப்பு எதிர்ப்பு

சென்னை, ஜூன் 29- பெயர்ப் பலகைகளுக்கான உள்ளாட்சித்துறை கட்டண விதிப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர்  ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:  வணிக நிறுவனங்களுக்கான பெயர் பலகைகளுக்கு கட்டணம் விதிக்க இருப்பதாகவும், உள்ளாட்சி  நிறுவனங்கள், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதற்கான ஆலோசனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வும் வியாழக்கிழமை (ஜூன் 29)  செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகள் வணிக சமுதாயத்திற்கு மிகப்பெரும் பேரிடியாகும். ஏற்கெனவே வணிக கட்டிடங் கள் மீதான சொத்துவரி பன்மடங்கு உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் வணிக கட்டிடங்களுக்கான வாடகை பெருமளவு உயர்த்தப் பட்டிருக்கிறது.

அதோடு இருமுறை  மின்கட்டண உயர்வும்  வணிகர்க ளுக்கு நிதிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளது.  இந்தச்சூழலில் செய்தித் தாள்களில் வெளிவந்திருக்கும் வணிக பெயர் பலகைகளுக்கான கட்டண விதிப்பு என்பது எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாக அமைந்துவிடும் என்பதை  முதல் வரின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். விளம்பரப் பலகைகளுக்கான கட்டணம் விதிப்பதை பேரமைப்பு எதிர்க்கவில்லை. ஆனால், சிறு, குறு வணிக கடைகள், நிறுவனங்கள்  மீதான உள்ளாட்சி உரிமம் பெற்று நடைபெறுகின்ற வணிகத்திற்கான பல்வேறு உரிமம், தொழில்வரி, எடை அளவு உரிமம், உணவுப் பாதுகாப்பு துறை உரிமம், ஜி.எஸ்.டி. உரிமம், தீயணைப்பு துறை உரிமம், தொழிலாளர் நலத்துறை உரிமம், வணிக கட்டிடங்கள் மீதான  வரி விதிப்பு, வணிக மின் பயன் பாட்டு கட்டணம் என பல்வேறு வகைகளில் வணிக நிறுவனங்கள் அரசுக்கு வருவாய்க்கான வழிகளில் துணை நிற்கின்றன. வணிக பெயர்ப் பலகை என்பது ஒரு வணிக நிறுவனத்தின் அடை யாளம் மட்டுமே, அந்த அடையாளத் தின் மூலம் அரசு அங்கீகாரம் அந்நிறு வனத்திற்கு அளிக்கப்படுகிறது. அந்த வணிக அடையாளத்திற்கு கட்டணம் விதிப்பு என்பது நீதிக்கு முரணானது. தமிழ்நாடு முதலமைச்சர்  உடனடியாக தலையிட்டு பெயர்ப் பலகைகளுக்கான கட்டண விதிப்பை உள்ளாட்சி அமைப்பு கள் கைவிட உள்ளாட்சி அமைப்புக ளுக்கு அறிவுறுத்த வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.