கனல் கண்ணன் மீது 3 மாதத்தில் குற்றப்பத்திரிகை
சென்னை,ஜன.10- திரைப்பட சண்டைப் பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண் டுமென காவல்துறைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருச்சி சீரங்கம் கோயில் முன்னால் இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று கனல் கண்ணன் பேசி யிருந்தார். இதனால் அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரையடுத்து அவரை பாண்டிச்சேரியில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் இவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், அவர் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: பேரவைத் தலைவருடன் இபிஎஸ் அணி சந்திப்பு
சென்னை,ஜன.10- எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்குமாறு அதி முக எடப்பாடி அணியினர் சட்டப்பேரவை தலைவரை சந்தித்து வலியுறுத்தினர். செவ்வாயன்று (ஜன.10) காலை 9.30 மணிக்கு தலைமைச் செயல கத்தில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி,தங்கமணி, கே.பி.முனு சாமி, செங்கோட்டையன், ஆர்.பி.உதய குமார் உள்ளிட்டோர் பேரவைத் தலைவர் மு. அப்பாவுவை சந்தித்தனர். அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஆர்.பி.உதய குமாருக்கு வழங்குவது தொடர்பாக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு விளக்கமளித்த பேரவைத் தலைவர், இந்த விவகாரம் தனது பரி சீலனையில் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
காங். எம்எல்ஏ மறைவு: பேரவை ஒருநாள் ஒத்திவைப்பு
சென்னை,ஜன.10- தமிழக சட்டப்பேரவை செவ்வாயன்று (ஜன. 10) காலை 10 மணிக்கு கூடியது. அப்போது, மறைந்த எம்எல்ஏக்கள், பல்துறை பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் சின்னசாமி, தில்லை காந்தி என்கிற ஆதிமூலம், துரை கோவிந்தராஜன், சோமசுந்தரம் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து தமிழறிஞர்களான முனைவர் நெடுஞ்செழியன், முனைவர் அவ்வை நடராசன், பிரபல வசனகர்த்தா ஆரூர்தாஸ், பிரபல ஓவியர் மனோகர் தாஸ், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணை யத் துணைத்தலைவர் மஸ்தான் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கால்பந்து அரசன் கால்பந்து விளையாட்டில் அரசனாக திகழ்ந்தவர் பீலே. அவர் கடந்த மாதம் 29 ஆம் தேதி மரண மடைந்தார். கருப்பு முத்து என்றெல் லாம் போற்றப்படும் அவர், கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான். பிரேசில் நாட்டுக்கு மூன்று முறை உலகக் கோப்பையை வென்று கொடுத்தவர். உலகின் மிக தலைச் சிறந்த வீரரான அவரது ஆட்டத்தை பார்த்து மயங்காதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு உலகம் முழுவதும் கால்பந்து ரசிகர்களை மட்டுமல்ல கால்பந்து காதலர்களை யும் கட்டிப்போட்டவர். அவரது மறைவால் அவரை பிரிந்து வருந்தும் உறவினர்கள், உலக கால்பந்து ரசிகர்கள் அனை வருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவை சார்பிலும் இரங்கல் தெரிவிக்கப் பட்டது. திருமகன் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய அரசின் அமைச்ச ருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவ னின் மகனுமான ஈ.வெ.ரா. திரு மகன் மறைவுக்கும் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நேபாளம் : மாகாணங்களிலும் இடதுசாரிகள் ஆட்சி
காத்மண்டு, ஜன.10- நேபாளத்தில் இடதுசாரிக் கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைத்தது போன்று, அங்குள்ள மாகாணங்களிலும் முதலமைச்சர்களாக இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பொறுப்பேற்க உள்ளனர். நேபாள நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகள் வெவ்வேறு அணிகளில் போட்டியிட்டன. தேர்தல் முடிவுகள் வந்தபிறகு, மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்தன. அதன்படி, மாவோயிஸ்டுகள் மையத்தைச் சேர்ந்த புஷ்ப குமார் தஹல் என்ற பிரச்சண்டா பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர் பிரதம ராகப் பொறுப்பேற்றுக் கொள்வார். இதே அடிப்படையில் மாகாணங்களிலும் இணைந்து செயல்பட இடதுசாரிக்கட்சிகள் தீர்மானித்தன. ஏழு மாகாணங்களில் மூன்றில் நேபாள கம்யூனிஸ்ட்(ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சியும், ஒன்றில் மாவோயிஸ்ட் மையமும் முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளப் போகின்றன. இரண்டு மாகாணங்களில் சுழற்சி முறை யில் பொறுப்பேற்றுக் கொள்வார்கள். சில மாகாணங்களில் சிறிய கட்சிகளும் முதலமைச்சர் பொறுப்புக்கு உரிமை கோரி வருகின்றன. ஆனால் அவர்களுக்கு சட்ட மன்ற சபாநாயகர் பொறுப்புகள் உள்ளிட்ட சில பதவிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மத்திய மற்றும் மாகாண அரசுகள் சுமுக மாக செயல்படத் தொடங்க வேண்டும் என்பதில் நேபாள கம்யூனிஸ்ட் (ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் மாவோயிஸ்ட் மையம் ஆகிய கட்சிகள் உறுதியாக உள்ளன.