சோட்டாடேபூர், (குஜராத்), ஜூலை 26- திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக பதவியேற்றதை கொண்டா டும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் மதுபோதையில் வந்து பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சோட்டாடேபூர் பகுதியில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கொண்டாட்ட நிகழ்ச்சி யில், மாவட்டத் தலைவர் ரஷ்மிகாந்த் வாசவா மது அருந்திவிட்டு பங்கேற்றுள் ளார். ரஷ்மிகாந்த் வாசவா மேடையில் ஏறு வதற்கு மற்றவர்கள் உதவியுள்ளனர். அமைச்சர் நிமிஷா சுதர் அருகில் அமர்ந்து கொண்ட ரஷ்மிகாந்த் கண்ணைத் திறக்கமுடியாத நிலையில் இருந்துள்ளார். வாசவா குடிபோதையில் இருந்ததாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் விமர்சித்துள் ளனர். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. இதனிடையே உதேபூர் மாவட்டத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ரஷ்மிகாந்த் வாசவா முன்வந்துள்ளதாக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் பார்கவ் பட் கூறியுள்ளார்.