தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த போராட்டம் நேற்று இரவு ஒரு மணியை கடந்தும் நடைபெற்றது.
மே மாதம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை ஊழியர்களுக்கு 10 லட்சமும் உதவியாளர்களுக்கு ஐந்து லட்சமும் வழங்க வேண்டும், முறையான பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்டு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகங்கள் முன்பும் கோஷங்களை எழுப்பி இரண்டாவது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.