புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டி யலின மக்கள் பயன் படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 26-வது நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில், 6 ஆயுதப்படை காவலர் களிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். 6 காவலர்களும் புதுக்கோட் டை மாவட்ட ஆயுதப் படை சரகத்தைச் சேர்ந்த வர்கள் ஆவார். இவ் வழக்கில் இதுவரை 98 பேர் விசாரிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.
உளவு மற்றும் கண்காணி ப்புக்கான இந்தியாவின் முதல் உள்நாட்டு மேம்பட்ட ஆளில்லா விமானம் அடுத்த வாரம் பெங்களூருவில் நடை பெறும் ஏரோ-இந்தியா கண்காட்சியின் போது பறக்க விட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிஆர்டிஓ-வால் உரு வாக்கப்பட்டு தபஸ்- பிஎச் என்று பெயரிடப் பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம் 28,000 அடி உயரத்தில் இயங்கி, தொடர்ந்து 18 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் திறனும் கொண்டது.
2022-ஆம் ஆண்டில் நாட்டின் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு எதி ராக 19 ரேன்சம்வேர் (ransomware - குறிப் பிட்ட தொகைக்காக, கணினி செயல்பாடு களை தடுக்கும் முறை) தாக்குதல்கள் பதிவு செய்யப்பட்டதாக மாநி லங்களவையில் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல் தெரிவித்தார்.
மும்பை விமான நிலை யத்தில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.1.44 கோடி மதிப்புள்ள 2.8 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வரும் மார்ச் மாதம் முதல் எண்ணெய் உற்பத்தியை ஒரு நாளைக்கு 5,00,000 பீப்பாய்களாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் தகவல் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் ஆண் ட்ராய்ட் மொபைல்களில் தனது ஆதிக்கத்தை தவ றாகப் பயன்படுத்திய தற்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1337.76 கோடி அபரா தம் விதித்த விவகாரத்தில் கூகுள் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த நிலை யில், சிசிஐ உத்தரவை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அரசு உதவிபெறும் தனி யார் பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை இட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அர சாணைக்கு இடைக் காலத் தடைவிதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப் பித்துள்ளது.
உலகச் செய்திகள்
உலகம் முழுவதுமிருந்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. ரஷ்யா, ஈரான், வெனிசுலா, மெக்சிகோ, பிரேசில், எல்சால்வடார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் மேலும் நிவாரணப் பொருட்களை அனுப்பப் போகின்றன. இந்தியா உள்ளிடட நாடுகள் மீட்புப்பணி வீரர்களை அனுப்பியுள்ளன. நிலைமையைநேரில் பார்ப்பதற்காக உலக சுகாதாரக் கழகத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசுஸ் சிரியாவுக்கு செல்லவிருக்கிறார்.
கடுமையான எரிபொருள் நெருக்கடிக்கு தென் ஆப்பிரிக்கா ஆளாகியுள்ளது. மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் பெரும் நெருக்கடியில் நாடு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ராமபோசா வெளியிட்டிருக்கிறார். நாட்டு மக்களிடையே அவர் உரையாற்றுகையில் இதைத் தெரிவித்துள்ளார். தன்னுடைய அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருந்து குடியரசுக்கட்சியின் ஜார்ஜ் சாண்டோசை வெளியேற்ற ஜனநாயகக்கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டு வருகிறார்கள். இது போன்ற தீர்மானங்கள் வெறும் அடையாளப்பூர்வமானதாகவே இருக்கும். தனது வரலாறு மற்றும் கல்விப்பணிகளில் மோசடி வேலைகளைச் செய்ததாக சாண்டோஸ் ஒப்புக் கொண்டிருந்தார். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வந்தன. அவர் மறுத்ததால், அவரை நீக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வரும் முயற்சி நடக்கிறது.