states

நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக எம்.பி.க்கள்!

புதுதில்லி, ஜூலை 28 - விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, அக்னிபாதை விவகாரங்களை விவாதிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வியாழக்கிழமையன்று பாஜக உறுப்பினர்களே அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை முடக்கினர். நாடாளுமன்றத்தில் 27 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலை யில், எதிர்க்கட்சிகளின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவ தால், அதன்மீதான கவனத்தை திசைத் திருப்பும் வகையில், குடியரசுத் தலை வர் திரௌபதி முர்மு குறித்து, காங்கிரஸ் மக்களவைக்குழுத் தலை வர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இழிவாக பேசிவிட்டதாகவும், இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி  தொடங்கி, ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றம் தொடங்கிய நாளில் இருந்தே விலைவாசி உயர்வு, அரிசி, கோதுமை, தயிர் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜிஎஸ்டி,  பணவீக்கம், அக்னிபாதை எனப்படும் காண்ட்ராக்ட் ராணுவ வீரர்கள் திட்டம் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர்  போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒன்றிய அரசோ, எந்த வகையிலும் விவாதத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று பிடிவாதமாக உள்ளது. அத்துடன், நாடாளுமன்ற அவைகளுக்குள் துண்டறிக்கைகள், பேனர்களை பிடிக்கக் கூடாது என்ற விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தி யதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரை இரண்டு அவைகளிலிருந்தும் சஸ்பெண்ட் செய்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டாக்டர் வி.சிவதாசன், ஏ.ஏ.ரஹீம், சிபிஐ உறுப்பினர் சந்தோஷ்  குமார், திமுக உறுப்பினர்கள் எம்.எம். அப்துல்லா, ஆர்.கிரிராஜன், என்.ஆர்.  இளங்கோ, எம்.சண்முகம், என்.வி.என். சோமு கனிமொழி, திரிணாமுல் உறுப்பினர் கள் சுஸ்மிதா தேவ், மௌசம் நூர், சாந்தா சேத்ரி, டோலா சென், சாந்தனு சென், அபி ரஞ்சன் பிஸ்வர், நதிமூல்  ஹக், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி உறுப்பினர்கள் லிங்கையா யாதவ், ரவிகண்ட்ர வடி ராஜூ, தாமோதர் ராவ்  தேவகொண்டா, ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சஞ்சய் சிங் உட்பட  20 மாநி லங்களவை உறுப்பினர்கள், மாணிக் கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரி தாஸ், டி.என். பிரதாபன் ஆகிய மக்கள வை காங்கிரஸ் உறுப்பினர்கள் என  இந்த 24 உறுப்பினர்களும் நாடாளும ன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு 50 மணி நேரத்திற்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். “இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி. க்கள் மன்னிப்பு கேட்டு, அவைக்குள் பதாகைகளை காட்ட மாட்டோம் என உறுதியளித்தால் அவர்களின் இடை நீக்கத்தை அவைத் தலைவரால் ரத்து செய்ய முடியும்’’ என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார். ஆனால், அதனை ஏற்க மறுத்துவிட்ட எதிர்க்கட்சி உறுப்பி னர்கள் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

போராட்டத்தில் ஈடுபடும் எம்பி களுக்கு காலை உணவை திமுக  மாநிலங்களை உறுப்பினர் திருச்சி  சிவா ஏற்பாடு செய்து வழங்கி வரு கிறார். அதேபோல, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மதிய உணவு, இரவு உணவு ஆகிய வற்றுக்கு மாறி மாறி ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றன. இதனிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 10ஆவது நாளான வியாழக்கிழமையன்று காலை மக்களவை கூடியதும் பாஜக-வினரே புதிய பிரச்சனை ஒன்றைக் கிளப்பி அமளியில் இறங்கி னர். காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்மு வை ‘ராஷ்டிரபதி’ என்பதற்குப் பதிலாக ‘ராஷ்டிரபத்னி’ என கூறி அவமரியாதை செய்திருப்பதாகவும், இதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் இப்பிரச்சனை யைக் கிளப்பிய ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “ஆதிர் ரஞ்சன் பேச்சுக் காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும், “தனது கட்சியை சேர்ந்த எம்.பி ஒருவரை இவ்வாறு பேச அனுமதித்ததன் மூலம் சோனியா காந்தி பழங்குடியின மக்கள் விரோதி, தலித் விரோதி, பெண்கள் நல விரோதியாக மாறியுள்ளார்” என்றும் குற்றம் சாட்டினார்.

அதேபோல நிதியமைச்சர் நிர்மலா  சீதாராமனும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். “இது அப்பட்டமான ஒரு பாலியல் ரீதி யிலான விமர்சனம், ஒரு பெண்ணான சோனியா காந்தி இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார். அப்போது, தனது பேச்சு குறித்து விளக்கம் அளிப்பதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஆதிர்  ரஞ்சன் சவுத்ரி கூறினார். “குடியரசு தலைவரை அவமதிக்கும் எண்ண மில்லை, ‘ராஷ்ட்ரபத்னி’ என  தவறு தலாக கூறிவிட்டேன்.  வேண்டுமானால் என்னை தூக்கிலிடுங்கள்: சோனியா காந்தியை ஏன் இதில் இழுக்கவேண்டும்? குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கத் தயார்” என்று ஆதிர் ரஞ்சன்  சவுத்ரி தெரிவித்தார்.  ஆனால், அதனை காதுகொடுத்துக் கேட்காத பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் முதலில் பகல் 12 மணி வரைக்கும் அதன் பின்னர் 2 மணி வரைக்கும், அதைத்  தொடர்ந்து 4 மணிவரைக்கும் மக்களவை ஒத்திவைக்கப் பட்டது. இதே விவகாரத்தை  பாஜகவினர் மாநிலங்கள வையிலும் எழுப்பியதால், மாநிலங்களவையும் பிற் பகல் 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விவ காரத்தில் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நிதியமைச்சர் நிர்  மலா சீதாராமன் தலைமை யில் பாஜக பெண் உறுப்பி னர்கள் அவைக்கு வெளியே யும் தொடர்ந்து முழக்கங் களை எழுப்பினர். இதனிடையே குடியர சுத் தலைவர் அவமதிக்கப் பட்டதாக கூறப்படும் சம்ப வம் குறித்து, காங்கிரஸ் தலை  வர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி,  “இது வாய் தவறி வந்த  வார்த்தை” என்று விளக்கம ளித்தார். மேலும், “விலை வாசி உயர்வு, ஜிஎஸ்டி, அக்னி  பாதை திட்டம், வேலையில்  லாத் திண்டாட்டம் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்த முக்கிய விவாதங்களை திசை திருப்பவே இந்த விவ காரத்தை பாஜக தற்போது கையில் எடுத்துள்ளது” என்  றும் கூறினார்.

“குடியரசுத் தலைவர் யாராக இருந்தாலும் அவர் எங்களுக்கு குடியரசுத் தலைவர்தான். அவர் எந்த சமூகத்தை சார்ந்தவராக இருந்தாலும் எங்களுக்கு அவர் மரியாதைக்குரிய குடி யரசுத் தலைவர்தான். நேற்று  (புதனன்று) விஜய் சவுக்கில் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது, ‘நாங்கள்  எங்கு செல்ல விரும்புகி றோம்’ என்று செய்தியாளர் கள் எங்களிடம் கேட்டனர். நான் குடியரசுத் தலைவரின் வீட்டிற்குச் (ராஷ்டிரபதி இல்  லம்) செல்ல வேண்டும் என்று  அவர்களிடம் சொன்னேன். அப்போது வாய் தவறி ‘ராஷ்டிரபத்னி’ என சொல்லி விட்டேன். இது தவறுதலாக சொல்லப்பட்ட வார்த்தை, அதை ஒளிபரப்பாமல் இருப்  பது நல்லது என சம்பந்தப்  பட்ட ஊடகவியலாளர்களிட மும் கூறியிருந்தேன். ஒரே யொரு வார்த்தையில் நான் தவறு செய்துவிட்டேன்” என்  றும் டுவிட்டரில் ஆதிர் ரஞ்  சன் பதிவிட்டு விளக்கமளித் துள்ளார். இதேபோல தனியார் செய்தி ஊடகத்தின் கேள் விக்கு பதிலளித்துள்ள சோனியா காந்தி, “ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே மன்னிப்பு கோரிவிட்டார்” என்று கூறியுள்ளார். முன்னதாக, வியாழ னன்று மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்.பி.க்கள் சுஷில் கி.ஆர் குப்தா, சந்தீப் கி.ஆர்.  பதக், சுயேச்சை எம்.பி அஜித் குமார் புயான் ஆகிய 3 உறுப் பினர்களும் இந்த வாரம்  முழுவதும் சஸ்பெண்ட் செய்  யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து சஸ்பெண்ட் செய் யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க் களின் எண்ணிக்கை 27 ஆக  உயர்ந்துள்ளது.