states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

அதானியுடன் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர் பாக பிப்ரவரி முதல் மோடி யிடம் கேட்ட 100 கேள்வி கள் தொடர்பான புத்த கத்தை காங்கிரஸ் வெளி யிட்டது.

மணிப்பூரின் கலவர சம்ப வங்களுக்கு இடையே மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் சிங் புதிய டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள் ளார். டிஜிபி ஆக இருந்த  பி.டவுங்கல் வேறு துறை க்கு மாற்றப்பட்டார்.

“ஆப்பிள் மொபைல்” நிறுவன உதிரிபாக தயா ரிப்பு ஆலையான பாக்ஸ் கானிடம் ஜூலை 1 அன்றுக்குள் நிலம் ஒப் படைக்கப்படும். 2024 ஏப்ரல் மாதத்திற்குள் ஐபோன்  உற்பத்தி தொட ங்கி, பாக்ஸ்கான் 50,000 வேலைகளை உருவாக் கும் என கர்நாடக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பீகார், மேற்கு வங்கம், சிக் கிம், மகாராஷ்டிரா, சத்தீஸ் கர் உள்ளிட்ட சில மாநி லங்களில் ஜூன் 5 வரை  வெப்ப அலை அளவில் வெயிலின் தாக்கம் இருக் கும். மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள் ளது என இந்திய வானி லை ஆய்வு மையம் எச்ச ரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்ட ரூ20 கோடி மதிப்புள்ள தங்கம் மீட்கப்பட்டது.

கர்நாடகாவில் இந்திய விமானப்படை பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், ஒரு பெண் விமானி உட்பட இரு விமானிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.

நாட்டில் மே மாதம் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,57,090 கோடி என ஒன்றிய நிதித்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

மேகதாது அணையால் கர்நாடகாவுக்கு பயன் இருக்கலாம், தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.

உலகச் செய்திகள்

ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு 30 ஆயிரம் டன் உரத்தை  இலவசமாக ரஷ்யா அனுப்பியிருக்கிறது. இந்தத் தகவலைத்  தெரிவித்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “இன்னும் சில நாட்களில் 30 ஆயிரம் டன் உரத்தை கென்யாவின் மோம்பாசா துறைமுகம் பெற்றுக் கொள்ளும்” என்றும் இந்த உரம் கென்யாவின் விவசாயத்திற்குப் பெரிதும் உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து 12 லட்சம் பேர் ஈரானுக்கு வந்து  சிகிச்சை பெற்றுச் சென்றிருக்கிறார்கள் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் பஹ்ராம் எய்னோல்லாகி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்றைய நாளில், இந்தப் பகுதிகளில் மட்டுமல்ல, உலகிலேயே சுகாதாரத்துறையில் சிறந்த நாடுகளில் ஒன்றாக ஈரான் உருவாகியிருக்கிறது. சிகிச்சைக்காக மட்டுமல்ல, மருத்துவப் படிப்புக்காகவும் உலகின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள் வருகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

ஜூலை 23 ஆம் தேதியன்று ஸ்பெயின் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் இந்தத் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் கடந்த வாரத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு பரிந்துரைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்றின் ஈரப்பதத்தில் இருந்து மின்சாரம் தயா ரிக்கும் புதிய முறையை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். 100 நானோமீட்டருக்கும் குறை வான விட்டம் கொண்ட நானோ போர்டுகளைக் கொண்டு, ஈரப்பதத்தி லிருந்து மின்சாரத்தை உருவாக்க முடியும் என்ப தே இந்த புதிய கண்டு பிடிப்பின் அறிவியல் வளர்ச்சி என விஞ்ஞானி கள் கூறியுள்ளனர்.

கரூரில் வருமான வரித் துறை அதிகாரிகளை தாக்கியதாக கைதான 19 பேருக்கும் ஜாமீன் வழங்கி, கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.