states

பெண்களுக்கு எதிரான கருத்துக்களை விலக்கிக் கொள்ளுங்கள்!

புதுதில்லி, அக்.15- பெண்களுக்கு எதிராகப் பதிவு செய்  துள்ள கருத்துக்களை விலக்கிக் கொள்ள  வேண்டுமென மகளிர் தேசிய ஆணை யத்தின் தலைவர் ரேகா ஷர்மாவை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் சார்பில்  அவருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நாடு தழுவிய அளவில் சுமார் ஒரு  கோடி பேரை உறுப்பினர்களாகக் கொண்ட  ஓர் அமைப்பாகும். 1991ஆம் ஆண்டு மக ளிர்க்கான தேசிய ஆணையச் சட்டம் நிறை வேற்றப்படுவதிலும், அதனைத் தொடர்ந்து ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் மகளிர்  தேசிய ஆணைய அமைப்புகள் அமைக்கப்  படுவதிலும்,  முக்கிய பங்கினை எங்கள் அமைப்பு ஆற்றியிருக்கிறது என்று பெரு மையுடன் கூறிக்கொள்ளும் ஓர் அமைப்பு மாகும்.  பெண்களின் வளர்ச்சி மற்றும் பெண்  களின் சமத்துவம் மற்றும் கண்ணியம் காக்கப்பட மகளிர் தேசிய ஆணையமானது தன்னுடைய குறுகிய அரசியல் மற்றும் சமூகப் பார்வையை உதறி எறிந்துவிட்டு, அனைத்துப் பெண்களுக்கும் நீதி கிடைத்  திட அச்சமின்றி யாருக்கும் வளைந்து கொடுக்காது போராடும் அமைப்பாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் எப்போதும் எதிர்பார்க்கிறோம். ஆனால், நாட்டில் பெண்களின் நலன்களைப் பாதுகாத்திட முறையான பணிகளைப் புறக்கணித்துவிட்டு மக ளிர் ஆணையத்தின் தலைவர் செயல்  பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு, இந்தக் கடிதத்தை மிகவும் விரக்தியுடனும், வலி யுடனும் தங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கி றோம்.

மோடிக்கு வக்காலத்து

தங்களுடைய ட்விட்டர் பதிவுகளைக் கண்ணுறும் ஒடுக்குமுறைக்கும் வன் முறைக்கும், சுரண்டலுக்கும் ஆளாகும் பெண்கள், எப்படித் தங்களை அணுக முடியும்?    தங்களுடைய ட்விட்டர் செய்திகளைப் பார்க்கும்போது நீங்கள் இந்தியப் பெண்களுக்கான நபராக நடந்து கொள்ளா மல், ஒன்றிய ஆட்சிக்கு, குறிப்பாக பிரதமர் மோடிக்கு வக்காலத்து வாங்கும் நப ராகவே காணப்படுகிறீர்கள். கடந்த சில ஆண்டுகளாக பெண்களின் அவல நிலைமை நாட்டில் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்  முறை வெறியாட்டங்கள் தொடர்பான  வழக்குகள் கூர்மையாக அதிகரித்திருக்கிறது.  இதில் மேலும் கொடுமை என்ன வெனில் இவ்வாறு பெண்களுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் கயவர்கள் தங்களுக்குத் தண்டனை எது வும் கிடைக்காது என்று துணிவுடன் உல விக்கொண்டிருப்பதாகும். ஏனெனில் அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் அமைப்புகள்  ஏதேனுமொன்றுடன் இணைந்திருப்ப வர்கள். இதற்கு எங்களால் நூற்றுக்கணக் கான எடுத்துக்காட்டுகளைக் கொடுக்க முடியும்.

கேள்விக்குறியாகும் நேர்மை, நம்பகத்தன்மை

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளுக்கு எதிராக மகளிர் தேசிய ஆணை யம் எதிர்த்து நிற்க வேண்டும். ஆனால் அதன் நேர்மைத்தன்மையும், நம்பகத் தன்மையும் இப்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. அதன் தலைவர் என்ற முறை யில் உங்கள் கருத்துக்களே அதனை வெளிப்படுத்துகின்றன. பெண்களுக்கு எதிரான இத்தகைய  கருத்துக்களை உங்கள் ட்விட்டர் பக்கத்திலி ருந்து உடனடியாக அழித்திட வேண்டும்  என்று உங்களை வலியுறுத்துகிறோம். எதிர்காலத்தில் இத்தகைய அடாவடித்தான மான நடைமுறைகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள், இல்லையேல், மகளிர் தேசிய ஆணையத்தின் தலைவர் என்ற பொறுப்பைத் துறந்துவிட்டு, உங்கள் கட்சி  மற்றும் பிரதமரின் முழுநேர செய்தித்தொடர் பாளராக மாறிவிடுங்கள். மகளிர் தேசிய ஆணையம் என்பது நாட்டில் மகளிர் இயக்கத்தின் பொதுப் பாரம்பரியப் பண்பை உயர்த்திப்பிடிக்கும் ஓர் அமைப்பாகும்.  அதனை இழிவு படுத்தும் போக்கை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.                          (ந.நி)