சென்னை, மே 4- வீட்டுமனை இல்லாமல் துன்பப்படும் மக்களின் துயரத்தைப் போக்கிட, வீட்டு மனை -மனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் மனைப்பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்திட வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாகக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் பெரம்பலூரில் நடைபெற்றது. இதன்பின்னர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: தமிழக அரசு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும் என்று சட்டமன்ற கூட்டத்தொட ரில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
அதே நேரத்தில் பாகுபாடுகள் இன்றி அனைவருக்கும் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நகர்ப்புற வேலை உறுதித் திட்டத்திற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்காமல் இருப்பது பெரும்பாலான மக்களை துன் பத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. ஆகவே 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து நகர்ப்புற வேலை வாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரசு 33 சதவீதம் குறைத்து ரூ.60 ஆயிரம் கோடி யாக வெட்டிச் சுருக்கியிருக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத இந்த நட வடிக்கையை கண்டிப்பதோடு, இத்திட்டத்தை இந்தியா முழுவதும் செயல்படுத்த ரூ.2,72,000 கோடி நிதி தேவை என பல ஆய்வ றிக்கைகள் கூறுகின்றன. ஆகவே ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்கி இத்திட்டத்தை முடக்கா மல் செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதியான 100 நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும், சம்பளம் உயர்த்தி வழங்குவோம் என்பதை உடனே நிறைவேற்ற வேண்டும். விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டு களாக குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப் பட்டாவை அரசு உடனே வழங்க வேண்டும். குடி மனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்தை முந்தைய காலத்தின் திமுக அரசை போல செயல்படுத்திட வேண்டும். வயது முதிர்ந்த விவசாயத் தொழிலா ளர்களுக்கு வழங்கி வந்த முதியோர் உதவித் தொகை தடைபடாமல் வழங்குவதோடு, தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும். தமிழகத்தில் குறைந்தபட்ச சட்டக்கூலி 290 ரூபாயை கேரள அரசைப் போல 600 ரூபா யாக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் 1948 சட்டப்படி குறைந்தபட்ச சட்டக்கூலி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் சாதியின் பெயரில் தொட ரும் வன்முறைகள், தீண்டாமை,சாதி ஆண வப்படுகொலைகள் தடுக்கப்படவேண்டும். விவசாயத் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறையை அரசு உருவாக்க வேண்டும். கோடை காலம் என்பதை கவனத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்து கிரா மப்புறங்களிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் அகில இந்தியத் துணைத் தலைவர் ஏ. லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், பொரு ளாளர் அ. பழனிச்சாமி உள்ளிட்ட மாநில நிர்வாகி கள் கலந்து கொண்டனர். பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ரமேஷ், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ. கலை யரசி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.