states

மதுரை ஆதீன மடத்தில் தனியார் விடுதி நடத்துபவர் ரூ.25 லட்சம் டெபாசிட் செய்ய தவறினால் வெளியேற்றலாம்

மதுரை, மே 11- மதுரை  ஆதீன மடத்தில்  தனியார் விடுதி யை நடத்துபவர் 25 லட்ச ரூபாயை டெபாசிட்  செய்ய தவறினால் இந்து சமய அறநிலையத்  துறையின் மதுரை உதவி ஆணையர், மனு தாரரை அங்கிருந்து  வெளியேற்றலாம் என்று  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரை  தெற்கு மாசி வீதியில் உள்ள  மதுரை ஆதீன மடத்தின் உள்ளே  பாண்டிச்  சேரியைச் சேர்ந்த சண்முகம், இளவரசன்  குத்தகைக்கு பெற்று விடுதி நடத்தி வருகின்றனர். இந்த விடுதிக்கு கடந்த 2010 முதல் ஆதீ னத்திற்கு குறைந்தபட்ச வாடகை செலுத்தா மலும், மின்சார கட்டணத்தை  செலுத்தாம லும் இருந்ததால், இந்து சமய அறநிலை யத்துறையின் இணை ஆணையர் அவர்களை  அங்கிருந்து வெளியேற்ற உத்தரவிட்டிருந்தார்.  இதனை எதிர்த்து அறநிலையத்துறை உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரி சண் முகத்தின் மகன் இளவரசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  அவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை  ஆதீன மடத்திற்கு சொந்தமான இடத்தை  கடந்த 2010 ஆம் ஆண்டு மனுதாரர் குத்த கைக்கு பெற்று வணிக ரீதியிலான லாட்ஜ்  நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தற்போ தைய ஆதீனம் மனுதாரர் தங்களுக்கு சொந்த மான இடத்தை ஆக்கிரமித்து இருப்பதாக கூறி ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். 

இந்த வழக்கின் மீதான விசாரணை  நீதி பதி தண்டபாணி முன்பு வியாழனன்று நடை பெற்றது. மதுரை ஆதீனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், “முந் தைய ஆதீனம் இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளுக்கு முரணாக மனு தாரருக்கு குத்தகை வழங்கியுள்ளார். இந்து சமய அறநிலையத் துறையின் விதிகளின் படி 5 ஆண்டுகள் மட்டுமே குத்தகைக்கு வழங்க முடியும். மனுதாரர் தற்போது வரை   51 லட்சத்து 93 ஆயிரத்து 798 ரூபாயை வாடகை செலுத்த வேண்டும். ஆனால் வாடகை தொகை செலுத்தாமல் நிலுவை யில் உள்ளது. அறநிலையத் துறையின் உத்த ரவையும் மனுதாரர் மதிக்கவில்லை” என தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி,  இந்த  வழக்கில் வாடகை செலுத்த முகாந்திரம் இருப்பதாக கருதி, மனுதாரர் தரப்பில்  2 வாரத்தில் 25 லட்சம் ரூபாயை டெபாசிட்  செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன்,  மனுதாரருக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ஒருவேளை மனுதாரர்  25 லட்ச ரூபாயை டெபாசிட் செய்ய தவறினால் இந்து சமய அறநிலையத்துறையின் மதுரை உதவி ஆணையர் மனுதாரரை ஆதீனத்தின் சொத்தில் இருந்து வெளியேற்ற உரிய நட வடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டார்.