states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

திருவனந்தபுரம் லுலு மாலில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளி கலைஞர்களின் கலைக்குழுவான அனுயாத்ராவின் ‘ரிதம்’ திட்டத்தை சமூக நீதித்துறை அமைச்சர் ஆர்.பிந்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கலைஞர்களு டன் அமைச்சர் நடனமாடினார். கேரளத்தில் எல்டிஎப் அரசின் 4ஆவது நூறு நாள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘ரிதம்’ திட்டம் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் புதிதாக பதிவு செய்த கட்சிகளின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. புதிதாக பதிவு செய்யப்பட்ட 39 கட்சிகளின் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் அனுப்பி உள்ளது. பட்டியலில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் நடிகர் விஜய்யின் “தமிழக வெற்றி கழகத்தின்” பெயரும் இடம் பெற்றுள்ளது.

“60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு பிரச்சனைகள் உடை யவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பாதயாத்திரை மூலம் வர வேண்டாம்” என திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

“அமித்ஷாவின் வெளிநாட்டு பயணம் குறித்த உளவு தகவல் தருவோருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்கப்படும்” என காலிஸ் தான் தீவிரவாதி பன்னூன் மிரட்டல் விடுத்துள்ளார்.

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூர் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது. சரக்கு ரயில் தடம் புரண்டதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

தீபாவளி மற்றும் சாத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 7000 சிறப்பு ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தினசரி கூடுதலாக 2 லட்சம் பேர் பயணிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரி வித்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டட விபத்தில் இடிபாடுகளில் இருந்து ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த ஏழுமலை என்பது தெரியவந்தது.