states

துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா

சென்னை,டிச.28- உருமாறிய கொரோனா வைரஸ் (பி.எப்.7) தற்போது உலகின் பல்வேறு  நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து  வருகிறது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு 24 ஆம் தேதி முதல்  விமான நிலையத்திலேயே மீண்டும்  கொரோனா பரிசோதனை செய்யப் பட்டு வருகிறது. மேலும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்திலும் நோய் பரவல்  தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி மற்றும் ஆக்சிஜன்  வசதிகள், மருந்து கையிருப்பு உள்ளிட் டவை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், துபாயிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளில் சிலருக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியானது. இதில் புதுக் கோட்டை மாவட்டம், ஆலங்குடியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது புதிய வகை கொரோனாவா? என்பதை கண்டறிய மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் முடிவுக்காக அதிகாரிகள் காத் திருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 பேரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் கொரோனா பரிசோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  ஏற்கனவே, சீனாவிலிருந்து இலங்கை வழியாக மதுரை வந்த தாய்- மகளுக்கு கொரோனா தொற்று உறுதி யானது. இந்த நிலையில் துபாயிலி ருந்து சென்னை வந்த 2 பேருக்கு நோய் தொற்று இருப்பது குறிப்பிடத் தக்கது. இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் கூறுகையில், “கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் விமானத்தில் பயணம் செய்த பயணி கள் அனைவரும் பரிசோதனை செய்து கொண்டு தங்களை 15 நாட்கள்  தனிமைப்படுத்திக் கொள்ள  வேண்டும்”என்று அறிவுறுத்தி யுள்ளனர்.