சென்னை,அக்.31- தமிழ் வழியில் மருத்துவப் படிப்பை வழங்க விரைவில் புதிய மருத்துவக் கல்லூரி சென்னையில் தொடங்கப்பட வுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணி யம் தெரிவித்தார். சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.32 லட்சத்தில் நவீன மருத்துவ உபகர ணங்கள் வழங்கி, பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்களை மருத்து வத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பெண்களுக்கு மனநல சிகிச்சை, புற்றுநோய் கண்டறியும் சிகிச்சை மையம், யோகா, உணவு கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து சிகிச்சை மையம் ஒன்று துவங்கப் பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் அதி நவீன கருவி இந்த மருத்துவ மனையில் துவக்கி வைக்கப்பட்டுள் ளது”என்றார்.
கடந்த ஆண்டு தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதனடிப் படையில் தண்டையார் பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் ஒரு கல்லூரி அமைக்க வேண்டும் என்றும், அது தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி யாக இருக்க வேண்டும் என்றும் கேட்டு இருந்தோம். ஆனால், முதலில் மருத்துவக் கல்லூரி இல்லாத இடங் களில் மருத்துவக் கல்லூரி தொடங்க லாம் என முடிவு செய்துள்ளோம் என்றும் அவர்கூறினார். தென்காசி, மயிலாடுதுறை, பெரம் பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆறு மாவட்டங் களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு மருத்துவக் கல்லூரிக்கான ஒப்பு தல் கிடைத்தவுடன் சென்னையில் தமிழ் வழியில் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்றும் அமைச்சர் தெரி வித்தார்.