states

img

மணல் கொள்ளையர்களால் நிகழ்த்தப்பட்ட கொலை: விசாரிக்க புதிய விசாரணை அதிகாரி நியமனம்

தூத்துக்குடி, ஏப்.29- மணல் மாபியாக்களால் தூத்துக்குடி மாவட்டம் முறப்ப நாடு கிராம நிர்வாக அலுவலர்  லூர்து பிரான்சிஸ். கொல்லப்பட்ட  வழக்கை விசாரிக்க காவல்  துணைக் கண்காணிப்பாளரை விசாரணை அதிகாரியாக நியமித்  துள்ளார் தென்மண்டல காவல் துறைத் தலைவர் அஸ்ரா கார்க். தூத்துக்குடி மாவட்டம் புதுக்  கோட்டை அருகே உள்ள சூசை பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (வயது 55). இவர் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்  தார். இவரை கடந்த 26-ஆம் தேதி  இருவர் வெட்டிக் கொலை செய்த னர். இது தொடர்பாக ராமசுப்பிர மணியன், மாரிமுத்து ஆகிய இரு வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  விசாரணை  நடந்து வருகிறது.  முறப்பநாடு பகுதியில் மணல்  கொள்ளை தொடர்பாக பல்வேறு  குற்றச்சாட்டுகள் வருகிறது. இந்த கொலையின் பின்னணி என்ன  என்பது பற்றியும், மணல் கொள்ளை எப்போதும் நடக்கி றதா, காவல்துறை தகுந்த நட வடிக்கை எடுக்கவில்லையா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்  விகள் எழுகின்றன. 

இந்த நிலையில், கிராம நிர்  வாக அலுவலர் கொலை செய்யப்  பட்ட வழக்கில் புதிய விசாரணை அதிகாரியாக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் என்.சுரேஷ்  நியமிக்கப்பட்டுள்ளார். இதற் கான உத்தரவை தென்மண்டல காவல்துறைத் தலைவர் அஸ்ரா கார்க் பிறப்பித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கடந்த  2022-ஆம் ஆண்டு மே 14-ஆம்  தேதி நிகழ்ந்த கல்குவாரி விபத்  தில் நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போது நாங்குநேரி உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த  ரஜத் சதுர்வேதியை விசாரணை  அதிகாரியாக தென் மண்டல காவல்துறைத் தலைவர் நியமித் தார். இதனால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன்  கிடைப்பது மிகவும் கடினமாகி விட்டது. இந்த வியூகம் இந்த  வழக்கிலும் பயன்படுத்தப்படுவ தாக காவல்துறை வட்டாரங்கள்  தெரிவித்தன. விசாரணை அதிகாரி நியமன மும், இதன் மூலம் நடைபெற வுள்ள அடுத்தகட்ட நடவடிக்கை களும் மிக முக்கியமாகப் பார்க்கப்  படுகிறது.

விழித்துக்கொண்ட தூத்துக்குடி

மணல் மாபியாக்களால் தூத் துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் (55). கொல்லப்பட்ட தைத் தொடர்ந்து தாமிரபரணி  உள்ளிட்ட பல்வேறு நீர் நிலை களில் சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்படுகிறதா என்  பதைக் கண்காணிக்கவும், தடை யை மீறி செயல்படும் மணல் மாபி யாக்களை ஒடுக்கவும் தூத்துக்  குடி மாவட்டத்தில் தாலுகா அள வில் கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  தாலுகா அளவில் அமைக்கப்  பட்டுள்ள கண்காணிப்புக்குழு வில் வருவாய், காவல்துறை, பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளைச் சேர்ந்த  அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தங்க ளுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்  படையில் திடீர் ஆய்வு மேற்கொள்வர். சட்ட விரோத மணல் கொள்ளை உறுதி யானால் குற்றவாளிகளை கண்கா ணிப்புக்குழுவினர் உரிய பாதுகாப்பு டன் சென்று கைது செய்வார்கள். தாலுகா அளவிலான கண்காணிப் புக்குழுக்கள்  ஒவ்வொரு கிராமத்தி லும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடு வர். இதன் மூலம் சரியான நேரத்தில் குற்றவாளிகள் ஒடுக்கப்படுவார்கள்.  பதிவேடு குற்றவாளிகள், ரவுடி கள், சமூகவிரோதிகள், தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளி வரும் குற்றவாளிகள், பிரச்சனை செய்ப வர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் தொட ர்ந்து கண்காணிக்கப்பட உள்ளனர். அவர்கள் ஏதாவது சமூக விரோத நட வடிக்கைகளில் ஈடுபடப் போவதாக தக வல் கிடைத்தால்.  அவர்கள் உடனடி யாக விசாரணைக்கு உட்படுத்தப்படு வார்கள்  என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.