states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மத்தியப் பிரதேச மாநிலம் செஹோர் அருகே 300 அடி ஆழ்துளை கிணற் றில் விழுந்த குழந்தை யை 3 நாள் போராடி ராணு வம் மீட்ட நிலையில்,  மயக்க நிலையில் குழ ந்தை மருத்துவமனை யில் அனுமதிக்கப் பட்டுள்ளது.

கனடா நாட்டில் வேக மாக பரவி வரும் காட்டுத் தீயால் அமெரிக்கா மற்றும் கனடாவில் 10 கோடி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  காட்டுத் தீயால் அமெரிக்க நகரங் களான நியூயார்க், மாச சூசெட்ஸ் மற்றும் கனெக் டிகட் போன்ற நகரங்கள் கடும் மாசுபாட்டை எதிர் கொண்டு வருகின்றன.

கொரோனா ஊரடங்கில் விதிகளை மீறியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மத்தியப் பிரதேச அரசு திரும்பப் பெறுவதாக அறி வித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளா ஸ்டிக் பொருட்கள் பயன் படுத்தப்பட வில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத் தில் எத்தனை சோதனைச் சாவடிகள்  உள்ளன, எவ் வளவு பிளாஸ்டிக் பறி முதல் செய்யப்பட்டது என்ற அறிக்கையையும் தாக்கல் செய்யவேண் டும்.  சீல் வைப்பது, அபரா தம் விதிப்பது போன்ற நட வடிக்கைகள் மட்டும்  தீர்வாகாது என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஒடிசாவில் ரயில் விபத்து சம்பவத்தை விசாரிப்பது ஒன்றிய அரசின் வேலை. ஆனால் விபத்து குறித்து ஒன்றிய அரசு அதிகாரிகள் ஒவ் வொரு நாளும் புதிய விவரங்களைக் கொண்டு வருகிறார்கள். இது தொடர்பான விசாரணை முடிவடைந்துவிட்டதா? இல்லை உண்மைகளை மறைக்கவா இவ்வழக்கு சிபிஐக்கு  கொடுக்கப் பட்டது எனமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  கேள்விஎழுப்பியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன் னூர் - மேட்டுப்பாளையம் இடையேயான மலை ரயிலின் கடைசிப் பெட்டி தண்டவாளத்தை விட்டு வெளியேறியதால் ரயில்  சேவை ரத்துசெய்யப்பட்டது.

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் பதவிக்கு தமிழ ரான தர்மன் சண்முகரத் தினம் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தர்மன் சண்முகரத்தினம் தற் போது சிங்கப்பூர் அரசின் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக் கது.

கிழக்கு ஆப்பிரிக்க நா டான சோமாலியாவின் ஷபிலி நகரில் பதுங்கி யிருந்த பயங்கரவாதி களை குறிவைத்து பாது காப்புப் படையினர் அதி ரடி தாக்குதலில், அல்ஷ பாப் பயங்கரவாதிகள் 20 பேர் சுட்டுக்கொல்லப் பட்டனர்.

பீகார் மாநிலம் ரோஹ் தாஸ் மாவட்டத்தில் உள்ள நஸ்ரிகஞ்ச் என்ற இடத்தில் பாலத்தின் ஸ்லாப் மற்றும் தூணுக்கு இடையே சிக்கிய 12 வயது சிறுவனை 14 மணி நேரம் போராடி மீட்டது தேசிய பேரிடர் மீட்புப் படை.

உலகச் செய்திகள்

சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு மோதல்களால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரணப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரணப் பணி களை செய்வதற்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பை இரு தரப்பும் நடைமுறைப்படுத்தவில்லை. அதனால், சண்டை நடந்தாலும், நடக்காவிட்டாலும் நிவாரணப் பணிகள் நடைபெறும் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருக்கிறது.

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினும், சவூதி அரேபியாவின்  பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இரு தரப்பு உறவுகள் குறித்து ஏற்கனவே இருவரும் ஏப்ரல் 21 ஆம் தேதியன்று தொலைபேசியில் கலந்துரையாடினார்கள். தற்போது இருவரும் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் சந்தித்து ஓபெக் அமைப்பு மற்றும் அதன் கூட்டாளிகள் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்துப்  பேசினார்கள்.

வெனிசுலா, நிகரகுவா, கியூபா ஆகிய நாடுகளுக்கு ஈரானின் ஜனாதிபதி இப்ராகிம் ரெய்சி பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அமெரிக்காவின் தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நாடுகளுக்கு தனது ஆதரவை தெரி விக்கப் போவதாக அவர் கூறியுள்ளார். அத்தகைய தடைகள் எத்தகைய அழிவை உருவாக்கும் என்பதை ஈரான் தனது சொந்த அனுபவத்தால் உணர்ந்துள்ளதாகவும் அவரது பயணம் குறித்த அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.