கேள்வி: அரசால் நடத்தப்படும் ஐசிஹெச்ஆர் பல ஆண்டுகளாக எவ்வாறு உருமாற்றம் அடைந் துள்ளது? அதன் செயல்பாடுகள் பற்றிய உங்கள் பார்வை என்ன?
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1972இல் ஐசிஹெச்ஆர் உருவாக்கப்பட்டது பேராசிரியர் எம். எஸ்.ஷர்மா அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆங்கிலேயர்களால் எவ்வாறு இந்தியாவிற்கு அதிகார பரிமாற்றம் வழங்கப்பட்டது என்பதை பிரிட்டிஷ் வர லாற்று ஆசிரியர் 1970 களில் நிக்கோலஸ் மான்ஸர் நூலாக வெளியிட்டார்.இது இந்தியாவிற்கு அதிகா ரத்தை மாற்றிய ஆங்கிலேய அரசின் சில கண்ணோட் டங்களை பிரதிபலிக்கிறது. இதற்கு எதிராக ஐசிஹெச்ஆர் ஒரு பெரிய திட்டத்தை துவக்கியது. பேராசிரியர். எஸ். கோபால் “சுதந்திரத்தை நோக்கி”(Towards Free dom) என்ற ஆய்வு நூல் தொகுப்புகளை வெளி யிட்டார். சுதந்திரப் போராட்டம் தொடர்பாக பல ஆவணங்கள் வெளியிடப்பட்டது. இந்திய சுதந்திரம் ஆங்கிலேயர்கள் அளித்த பரிசு அல்ல.நாம் அனை வரும் போராடி பெற்றது என்பதை தெளிவாக காட்டு கிறது இந்த தொகுப்பு.
ஐசிஹெச்ஆர் வரலாற்று ஆராய்ச்சியை ஊக்கு விக்கிறது. அறிவியல் பூர்வமாகவும் மதச்சார்பற்ற தன்மையுடனும் திகழும் ஒரு உறுதியான அடித் தளத்தை அது ஊக்குவிக்கிறது. ஆனால் 1990களில் வாஜ்பாய் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு பல காரணங்களுக்காக இதனு டைய வெளியீடுகள் கடினமாகவும் சங்கடமாகவும் அமைந்துவிட்டன. சிறுபான்மையினர் மீதான வெறுப்பு மட்டுமே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அரசியலுக்கு அடிப்படை யாக உள்ளது. அவர்களைப் பொறுத்தவரை முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் இந்தியர்கள் அல்ல. இந்தியர்க ளுக்கு எதிரானவர்கள். டெல்லி சுல்தான்கள் காலத்தி லும் முகலாயர் காலத்திலும் செய்யப்பட்ட எந்த ஒரு நல்ல விஷயத்தையுமே அவர்கள் ஏற்றுக்கொள்வ தில்லை. அவர்களின் சித்தாந்தம் அதை என்றும் ஏற்பதும் இல்லை.
1930 மற்றும் 1940களில் பிரிட்டிஷார் ஆர்எஸ்எஸ் இடையே மிக நெருக்கமான உறவு இருந்தது. இது பிஜேபிக்கு சங்கடத்தை இயல்பாகவே இப்பொழுது ஏற்படுத்துகிறது. வாஜ்பாய் அரசாங்கம் “சுதந்திரத்தை நோக்கி “என்ற ஆய்வுத் தொடரையும் பாதியில் நிறுத்தியது. 2014 இல் நரேந்திர மோடி பிரதமர் ஆன வுடன் அதன் தலைவராக இருந்த பாசுதேவ் சட்டார் ஜியை பதவி நீக்கம் செய்தார். அறிவுலகில் பரவலாக அறிந்திடாத ஒரு பெயர் வை.சுதர்சன் ராவ். அவரை அந்த இடத்தில் பணியமர்த்தினார். ஆட்சியாளர்க ளுக்கு “பின் பாட்டு” பாடுபவர்களின் ஆய்வு கட்டுரைகள் வெளியிடும் பணி தான் இப்போது நடைபெறுகிறது.
கேள்வி: “ஜனநாயகத்தின் அன்னை - இந்தியா” என்ற நூலை ஐசிஹெச்ஆர் அண்மையில் வெளி யிட்டது. ஜனநாயகம் இந்தியாவில் ஆரம்ப காலத்திலேயே தழைத்தோங்கி இருந்ததா?
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1911 இல் கே.பி. ஜெய்ஸ்வால் என்பவர் வரலாற்று ஆசிரியராய் பணி புரிந்து வந்தார் .ஆறாம் நூற்றாண்டுகளின் குடியரசு மற்றும் பேரரசுகளை பற்றி அவர் எழுதியிருக்கிறார். மகாராஜாக்கள் ஆண்ட காலத்தில் சில இடங்க ளில் சுயாதீன அரசும் குடியரசும் ஜனநாயக முறைப்படி இருந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார். பிரிட்டிஷ் நெருக்கடியால் அவர் பதவி விலகினார். “ஹிந்து அரசியல் அமைப்பு_ இந்துக்களின் காலத்தில் இந்திய அரசியல் சாசன வரலாறு” என்ற அவரது நூல் பிறகு வெளியிடப்பட்டது. இந்தியா தான் ஜனநாயகத்தின் அன்னை என்ற ஒரு சிலர் வாதிட லுக்கு இந்த நூல் உதவுகிறது.
சொத்து உடையவர்களும் வேதங்கள் பயின்றவர்க ளும் மட்டுமே ஆட்சி பரிபாலனத்தில் பங்கு பெற முடியும் என உத்தரமேரூரில் காணப்படும் குடவோலை முறை நமக்கு தெரிவிக்கிறது. பிராமணர்கள் மட்டுமே இந்த நடைமுறைகளில் பங்கு பெற முடியும் அப்படி என்றால் இது என்ன ஜனநாயகம்? நிலங்களை உடையவர்களும் சமூக பிரமுகர்க ளும் மட்டுமே பங்கு பெறும் அமைப்புதான் அப்போது இருந்திருக்கிறது. ஒற்றை மன்னரின் ஆட்சியும் இல்லை. பேரரசர்களும் இல்லை சுயநலம் மிக்க அவர்களின் ஊழல் நிறைந்த ஆட்சிதான் அப்போது இருந்துள்ளது.
தி ஹிந்து : 30.12.2022,
தமிழில்: கடலூர் சுகுமாரன்