states

சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை, ஆக.3- சுதந்திர தின விழா வருகிற 15 ஆம்  தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட  உள்ளது. இதை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக ஒன்றிய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளதாக கூறப்படு கிறது. இதையடுத்து, ஒன்றிய அரசின்  உள்துறை அமைச்சகம் நாடு முழுவ தும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித் துள்ளது. விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் முக்கி யமான ரயில், பேருந்து நிலையங்கள் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற் பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாது காப்பு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சென்னை விமான நிலை யத்துக்கு வரும் வாகனங்களை, பிர தான நுழைவு கேட் பகுதியில் நிறுத்தி  சந்தேகப்படும் வாகனங்கள் பாது காப்பு படையினர் மோப்ப நாய் உதவி யுடன் சோதனை செய்கின்றனர். வெடிகுண்டு நிபுணர்கள் பரிசோதிக்கின்றனர். விமான நிலைய  வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீ சார் ரோந்து வந்து கண்காணிக் கின்றனர். ஒன்றிய தொழில் பாதுகாப்பு  படையினரின் அதிரடி வீரர்கள்  சென்னை விமான நிலையத்தின் உட்பகுதிகளில் தீவிரமாக சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர். விமான நிலையத்தில் பார்வை யாளர்கள் வருகைக்கான தடை ஏற்கெ னவே கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ச்சி யாக அமலில் இருப்பதால் மேலும் தீவிரமாக செயல்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் வரும்போது வழங்கப்படும் பாஸ்க ளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள் ளது. சென்னை விமான நிலையம் முழுவ தும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வருகிற 20 ஆம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும். வருகிற 13, 14, 15 ஆகிய  தேதிகளில் உச்சக்கட்டமாக 7 அடுக்கு  பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.