பொங்கல் பரிசு: 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை
சென்னை, ஜன.30- தமிழ்நாடு முழுவதுமுள்ள ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் உத்தர விட்டிருந்தார். அதன்படி தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பணம் ஒதுக்கப்பட்டு அந்த தொகை ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பணத்தை பெரும் பாலான மக்கள் வாங்கினாலும் ஒருசிலர் இந்த பணம் வேண்டாம் என்று வாங்காமல் இருந்து விட்டனர். அந்த வகையில், மாநிலம் முழுவதும் அரசின் பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்க வில்லை என்று தகவல் வெளியாகி யுள்ளது. அதில் அதிகபட்சமாக தென் சென் னையில் 49 ஆயிரத்து 538 பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்க வில்லை என்று கூறப்படுகின்றது. இதன்மூலம், அரசு கருவூலத்திற்கு ரூ. 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாக தமிழ்நாடு உணவுத்துறை தெரிவித்துள்ளது.
பாஜக நிர்வாகி மீது காயத்ரி ரகுராம் புகார்
சென்னை,ஜன.30- பாஜகவில் இருந்து விலகியிருக்கும் நடிகை காயத்ரி ரகுராம், மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி யின் நிர்வாகிகள் சிலர் மீது தொடர்ந்து புகார்களை அடுக்கி வருகிறார். இந்நிலையில், சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைன் வழி யாக காயத்ரி ரகுராம் புகார் ஒன்றை அனுப்பியிருக்கிறார். அதில், ‘ராணிப்பேட்டை மாவட்ட பாஜக நிர்வாகி பாபு, எனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
பேனா சின்னம்: இன்று கருத்துக் கேட்பு
சென்னை,ஜன.30- முன்னாள் மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் எழுத்துத் துறை பங்களிப்பை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு மெரினா கடற்கரையில் பேனா வடிவி லான நினைவுச் சின்னம் அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது மக்களின் கருத்தை கேட்க வேண்டும் என்று ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியது. இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சென்னை திருவல்லிக்கேணியில் காலை 10.30 மணிக்கு நடத்துகிறது.
மே 15, 17,19 தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை,ஜன.30- பள்ளி மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெறுவது வழக்கம். இதில் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பருவத் தேர்வாகவும் 10 ஆம் வகுப்பு, 11, 12 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப் படுகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையின்படி, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 வரை 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுகிறது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மார்ச் 14 துவங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரைக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை பொதுத் தேர்வு நடை பெறுகிறது. இதனையடுத்து, 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5 அன்றும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17 ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 அன்றும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
2.34 கோடி மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்கள் இணைப்பு: அமைச்சர்
சென்னை,ஜன.30- தமிழ்நாட்டில் இதுவரை 2.34 கோடி மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானி யம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவ.28 ஆம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர். இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதற்கான கால அவகாசம் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் தற்போது வரை மின் இணைப்பு எண்ணுடன் 2.34 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்,“முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்த வும், துவங்கப்பட்ட மின் இணைப்பு எண்ணு டன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இதுவரைக்கும் 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்த முள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 87.44% ஆகும். இதுவரை இணைத் திடாத வர்கள் விரைந்து இணைத்திட வேண்டு கிறேன்.” இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.