தஞ்சாவூர், மே 13- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில் மூன்றாம் உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு டிசம்பர் 1, 2 தேதிகளில் நடைபெறவுள்ளது என துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தில் இதற்கான அறி விப்பை வெளியிட்ட துணைவேந்தர் மேலும் தெரிவித்ததாவது: தமிழில் மாபெரும் குழந்தை இலக்கியப் படைப்பாளியாகப் போற்றப்படும் அமரர் அழ. வள்ளியப்பாவின் தலைமையில் செயல்பட்ட குழந்தை எழுத்தாளர் சங்கம் ஏறத்தாழ எட்டு குழந்தை இலக்கிய மாநாடு களை நடத்தியுள்ளது. தற்போது அந்த முயற்சிகளின் விரி வாக்கமாக புலம்பெயர்ந்த இந்தியத் தமி ழர்கள் வாழும் நாடுகளைச் சேர்ந்த படைப்பாளர்களையும் ஒன்றிணைத்து, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல் நாட்டுத் தமிழ்க்கலவித் துறை சார்பாக உலகத் தமிழ்க் குழந்தை இலக்கிய மாநாடு நடத்தப்படவுள்ளது.
உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்க் குழந்தைகளை மையமாகக் கொண்டு இம்மாநாடு நடைபெறவுள்ளது. ஏறத்தாழ 20 நாடுகளைச் சேர்ந்த குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் ஒன்று கூடும் மாநாடாகவும் இந்நிகழ்வு அமையவுள்ளது. மலேசியாவின் மூத்த குழந்தை இலக்கியப் படைப்பாளரான முனைவர் முரசு.நெடுமாறன் அயலகத் தலைமை ஆலோசகராக இம்மாநாட்டில் பங்காற்று வார். இந்நிகழ்வில் அமரர் அழ.வள்ளி யப்பாவின் மகளும், தமிழில் குழந்தை இலக்கியப் படைப்பாளராகவும் விளங்கும் தேவி நாச்சியப்பன், இம்மாநாடு தொடர் பாக தமிழில் குழந்தை இலக்கியப் படைப்பா ளர்களை அழைத்து ஆலோசனை நடத்த வுள்ளார். எதிர்காலக் குழந்தை இலக்கியம் குறித்து உலகப் படைப்பாளர்களின் கட்டு ரைகள் இடம் பெறும் ஆய்வுக்கோவை இப்பன்னாட்டு மாநாட்டில் வெளியிடப் படவுள்ளது. இவ்வாறு துணைவேந்தர் தெரி வித்தார். அப்போது, தேவி நாச்சியப்பன், அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறைத் தலைவர் இரா. குறிஞ்சிவேந்தன், பதிவா ளர் (பொ) சி.தியாகராஜன், பேராசிரியர்கள் பழனிவேலு, இரா.வெற்றிச்செல்வன், மக் கள் தொடர்பு அலுவலர் (பொ) இரா.சு. முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.