சென்னை, மே 17- தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உச்சபட்ச மின் நுகர்வு அதிகரித் துள்ளது என்றும், மின் தேவை அதிகரித்தாலும் எந்தவித பாதிப்பு களும் இல்லாமல் சீராக மின் விநி யோகம் வழங்கப்பட்டு வருகிறது என்றும் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். தமிழ்நாடு மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலை மையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவ லகத்தில், கோடைகாலத்தில் மின் தேவையை கையாள்வது குறித்து புதனன்று (மே 17) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறு கையில், கடந்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் மின் தேவை அதிகரித்திருக்கிறது. 2020-21இல் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் உச்சபட்ச மின் தேவை 16,481 மெகாவாட்டாக இருந்தது.
அதுவே, 2023-24இல் குறிப்பாக இந்த ஏப்ரல்,மே மாதங்களில், அதாவது கடந்த 45 நாட்களில் 19,387 மெகாவாட்டாக அதிகரித்திருக்கிறது. ஏறத்தாழ 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு தமிழ்நாடு முழுவதும் உச்சபட்ச மின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதேபோல், ஒருநாள் சராசரி யாக, இந்த ஆண்டில் 423 மில்லி யன் யூனிட் அளவுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதுவே முந்தைய ஆட்சியில் 2019-20இல் 369 மில்லியன் யூனிட்டாகத்தான் இருந்தது. தற்போது 423 மில்லி யன் யூனிட் என்ற அளவுக்கு உயர்ந்தாலும்கூட, எந்த பாதிப்பும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப் படுகிறது. கோடைக்காலம் துவங்குவ தற்கு முன்பே, கடந்த டிசம்பர் ஜனவரி மாதங்களிலேயே என்ன தேவை என்பது கணக்கிடப்பட்டு டெண்டர் கோரப்பட்டு, அதற்கான மின்சாரக் கொள்முதல் செய்ததன் மூலம் இது சாத்தியமானது. தமிழ்நாடு முழுவதும் எந்த தடையும் இல்லாமல் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. சென்னையின் மின் தேவை என்பது ஒட்டுமொத்த தமிழ் நாட்டின் தேவையைவிட மிக கூடுதலாக அதிகரித்திருக்கிறது. எனவே, சென்னைக்கு கூடுதல் கவனம் செலுத்த தனி ஆய்வுக் கூட்டம் நடத்த வலியுறுத்தப் பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை உச்சபட்ச மின் நுகர்வு என்று பார்த்தால், 2019-20இல் 3,738 மெகாவாட்டாக இருந் துள்ளது. 2020-21இல் 3,127 மெகாவாட்டாக இருந்தது. ஆனால், தற்போது சென்னையில் 4,016 மெகாவாட்டாக இருக்கிறது என்றும் அமைச்சர் கூறினார்.