states

டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள்

சென்னை, பிப்.4- மழையினால் பாதிக்கப் பட்ட டெல்டா பகுதி மாவட்  டங்களில் பயிர் சேதங்க ளைப் பார்வையிட அமைச்  சர் குழு அனுப்பிவைக்கப் படுகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித் துள்ளார்.   கடந்த சில நாட்களில்  தஞ்சாவூர், திருச்சி, மயி லாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற் றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையின் காரணமாக அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் நீரில் சாய்ந்து மூழ்கியுள்ளது அர சின் கவனத்திற்கு வந்துள் ளது என்று முதல்வர் கூறி யுள்ளார். இரு அமைச்சர்களுடன் வேளாண்மைத் துறைச் செயலாளர் மற்றும் இயக்கு நர் உள்ளிட்ட மூத்த துறை  அதிகாரிகளையும் இந்தக்  கள ஆய்வினை மேற் கொண்டு விவசாயிகளைச் சந்தித்துப் பேசி விபரங்க ளைப் பெற அறிவுறுத்தி யுள்ளேன். வரும் திங்கட் கிழமை (6-2-2023) அன்று இந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு வை சந்தித்து, சேத விப ரங்களை அறிந்து, மழை யினால் பாதிக்கப்பட்ட பயிர் களுக்கு பயிர்காப்பீடுத் தொகை பெற்றுத் தருவது குறித்தும், இழப்பீடு வழங்கு வது குறித்தும் உரிய மேல்  நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்பதைத் தெரிவித் துக்கொள்கிறேன் என்று முதல்  வர் வெளியிட்டுள்ள அறிக் கையில் குறிப்பிட்டுள்ளார்.