states

img

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

சென்னை,ஜன.2- தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டு மற்றும் 2 ஆவது பருவத்தேர்வு கடந்த டிசம்பர் 16 முதல் 23 ஆம் தேதி வரை நடை பெற்றது. இதனையடுத்து, விடு முறை டிசம்பர் 24 ஆம் தேதி  தொடங்கி ஞாயிறன்று (ஜன.1)  நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து திங்களன்று (ஜன.2) பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு தொடக்கப் பள்ளி ஆசிரி யர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக  ஆரம்பப் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம்  வகுப்பு வரை பயிலும் மாணவர்க ளுக்கு மட்டும் ஜனவரி 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. விடுமுறை முடிந்து பள்ளி திரும்பும் மாணவர்களுக்கு திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு  விடைத்தாள்கள் முதல் நாளில் வழங்கப்பட வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்கள் பின்தங்கிய பாடங்களில் கவனம் செலுத்தி அவர்கள் தேர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நிலுவை பாடங் களை துரிதமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.