புதுதில்லி, மார்ச் 18- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு எதிராக, சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் அவதூறு, கேலி, கிண்டல் விமர்சனங் கள் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் குடியரசுத் தலை வர் திரெளபதி முர்முவுக்கு கடிதம் எழுதி யுள்ளனர். “தற்போது தலைமை நீதிபதிக்கு எதிராக கிளப்பிவிடப்படும் கட்ட விழ்த்து விடப்பட்டுள்ள அவதூறு வார்த்தைகளும் உள்ளடக்கங்களும் மிக மோசமானவையாக உள்ளதுடன், இந்த அவதூறுகள் சமூக ஊடக தளங் களில் லட்சக்கணக்கான பார்வை களைப் பெற்றுள்ளது வருத்தம் அளிப்ப தாக உள்ளன” என்று கடிதத்தில் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய ‘மகா விகாஸ் அகாதி’ கூட்டணி அரசு ஆட்சி யில் இருந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2022 ஜூன் 22 அன்று சிவசேனாவுக்குள் உடை ப்பை ஏற்படுத்திய பாஜக, அதிருப்தி எம்எல்ஏக்களை வைத்து, உத்தவ் தாக் கரே அரசைக் கவிழ்த்தது. அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே வுக்கு ஆதரவளித்து புதிய கூட்டணி அரசையும் அமைத்தது.
இந்த நடவடிக்கைகளின்போது, ஆளுநராக இருந்த பகத்சிங் கோஷ் யாரி ஒருசார்பாக நடந்து கொண்டார் என்பது குற்றச்சாட்டாகும். அண்மை யில் இதுதொடர்பான வழக்கை விசா ரித்தபோது, “மகாராஷ்டிராவில் உத் தவ் தாக்கரே அரசை நம்பிக்கை வாக்கெ டுப்பு நடத்துமாறு உத்தரவிட்ட ஆளு நர் கோஷ்யாரியின் நடவடிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விமர்சனம் செய்தார். இதையொட்டி சமூகவலைதளங்க ளில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட்டை கேலி, கிண்டல் மற்றும் அவ தூறு பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்த அவதூறுகள் மீதுதான் குடியரசுத் தலைவர் திரௌ பதி முர்மு தலையிட்டு உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கள் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். மார்ச் 16 அன்று எழுதப்பட்ட அந்த கடிதத்தில், “மாண்புமிகு தலைமை நீதி பதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு, மகாராஷ்டிராவில் அரசாங்க உருவாக்கம் மற்றும் ஆளுநரின் பங்கு விவகாரத்தில் ஒரு முக்கியமான அர சியலமைப்பு பிரச்சனையைக் எடுத்து விசாரிக்கிறது என்பதை நாங்கள் அனை வரும் அறிவோம். இந்த விவகாரம் நீதித்துறைக்கு உட் பட்டது என்றாலும், மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியின் நலனுக்காக, அக் கட்சியின் மீது அனுதாபம் கொண்ட சமூக ஊடக ட்ரோல் ஆர்மி, மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதிக்கு எதிராக தாக்குதலைத் தொடங்கியது. வார்த் தைகளும் உள்ளடக்கங்களும் மோச மானவையாகவும் வருந்தத்தக்கவை யாக இருந்தன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக ஆபாச வார்த்தைகளில் விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் பதிவிடப்படுகின்றன. இது சமூக ஊடக தளங்களில் லட்சக்க ணக்கான பார்வைகளைப் பெற்றுள் ளது.
மகாராஷ்டிரத்தில் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள் மட்டுமே துணிச்ச லாக இதுபோன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபட முடியும். நீதி மன்றத்தின் விசாரணையில் நேரடியாக தலையிடும் இந்தச் செயலை உடனடி யாக தடுத்து நிறுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தின் நகல் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், தில்லி காவல்துறை ஆணையர், ஆகி யோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள் ளது.
ஒன்றிய அரசின் தலைமை வழக்கறி ஞர் ஆர். வெங்கடரமணிக்கும் தனியாக கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அந்த கடிதத்தில், “இந்தியாவின் தலைமை நீதிபதியை இதுபோன்று சமூக ஊட கங்களில் கேலி, கிண்டல் செய்வது நீதி யின் நடவடிக்கையில் தலையிடுவது ஆகும். எனவே, மோசமான கருத்து களை பதிவிடுபவர்களின் விவரங்களை தில்லி போலீசாரிடம் இருந்து அட்டர்னி ஜெனரல் பெற்று மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சட்ட அமைச்ச கம் நடவடிக்கை எடுக்க முன்வர வேண் டும்; இந்த குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக கடுமையான நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி.க்கள் விவேக் தன்கா, திக்விஜய் சிங், பிரமோத் திவாரி, சக்திசிங் கோஹில், அமீ யாக்னிக், ரஞ்சீத் ரஞ்சன், இம்ரான் பிரதாப் கர்ஹி, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா, சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் ராம் கோபால் யாதவ், ஜெயா பச்சன், சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டோர் கை யெழுத்திட்டுள்ளனர்.