states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சென்னை மருத்துவ பதிவு சட்டத்தையும், விதிகளையும் மூன்று மாதங்களில் முழுமை யாக திருத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், அதுவரை மருத்துவ கவுன்சில் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு நேரடியாகச் சென்று படித்தவர்களையே ஆசிரியர்களாக நிய மிக்கும் வகையில் ஆசிரியர் நியமன நடைமுறைகளை மூன்று மாதங்களில் மறு ஆய்வு  செய்ய கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாயை முந்தைய ஆண்டுகளைப் போல், ரொக்கமாக நியாயவிலைக் கடையிலேயே வழங்குவதற்கான ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும் இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் குரூப்-3 ஏ தேர்வுகள்ஜனவரி 28 அன்று நடத்தப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைப்போம்: முதல்வர்

சென்னை,டிச.6- அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டுள்ள பதிவில், “ஒடுக்கப்பட்ட  மக்களின் அடிமை விலங்கை ஒடிக்க புரட்சி செய்த புத்துலக புத்தர்; சமத்து வத்தை நோக்கிய போராட்டப் பயணத்தில் வடக்கு கண்ட பெரியார்;  புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத் கரின் நினைவுநாளில் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்  எனச் சூளுரைத்து உறுதியெடுப்போம்!”  என கூறியுள்ளார்.

பாஜகவிலிருந்து விலகிய சூர்யா சிவா

சென்னை,டிச.6-  திருச்சி சூர்யா சிவா தனது ட்விட்டர்  பக்கத்தில், “அண்ணன் அண்ணா மலைக்கு நன்றி. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லை யென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக் கும். இத்துடன் என் பாஜக உடனான  உறவை நான் முடித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் அலை பேசியில் உரையாடியபோது ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பான ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து, சூர்யா சிவா கட்சியி லிருந்து தற்காலிக நீக்கம் செய்யப் பட்டார். இந் நிலையில் அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் மீது குற்றம்சுமர்த்தியுள்ளார்.

சத்துணவு மையங்களை  மூடும் எண்ணம் இல்லை : அமைச்சர்

சென்னை,டிச.6- காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கும் நிலையில், சத்துணவு மையங்களை மூடும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:- தமிழ்நாட்டில் தற்போது 43,190 பள்ளி சத்துணவு மையங்களில் சுமார்  46 லட்சம் மாணவர்கள் பயன்பெறு கின்றனர். பள்ளிதோறும் பயனாளி கள் எண்ணிக்கை அடிப்படையில், தற்போது சத்துணவு மையங்களில் காலிப் பணியிடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை நிரப்ப  புள்ளி விவரங்கள் கோரப்பட்டுள் ளன. 28 ஆயிரம் சத்துணவு மையங் ்களை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. இந்த மையங் களை மூடும் எண்ணம் அரசுக்கு அறவே இல்லை. பள்ளி, சத்துணவு மையங்களின் எண்ணிக்கை, பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. சத்துணவு திட்டத்தை வலுப் படுத்தவும், தொடர் கண்காணிப்புக் காகவும்தான் அரசு நடவடிக்கை எடுக்கிறது. இதில் யாருக்கும் எந்த ஒரு சந்தேகமும் தேவையில்லை. காலை உணவு திட்டம் பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வரும் ஆண்டில்  விரிவாக்கம் செய்யப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். அப்படியிருக்கும்போது, சத்துணவு மையங்களை எப்படி  அரசுமூட முயற்சி எடுக்கும். காலிப் பணியிடங்களை நிரப்பவும், சத்தான உணவை முறையாக வழங்க வும், தொடர் கண்காணிப்பை வலுப் படுத்தவுமே அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கை

சென்னை,டிச.6- இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உரு வாகியுள்ள காற்றழுத்த தாழ்வு தற்போது  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளது.  8 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்,  கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட் டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிக ளில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு  இடங்களில் அதிகனமழையும் பெய்யக் கூடும். 9 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் கன  முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக 8 மற்றும்  9 ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு  அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.